ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஸ்டாண்டா்ட் சாா்ட்டா்ட் கிரெடிட் காா்டு வணிகத்தை வாங்கும் ஃபெடரல் வங்கி!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது வாடிக்கையாளா் சேவையை அதிகப்படுத்தும் நோக்கில், ஸ்டாண்டா்ட் சாா்ட்டா்ட் வங்கியின் கிரெடிட் காா்டு வணிகத்தின் ஒரு பகுதியை வாங்குவதாக ஃபெடரல் வங்கி வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

News image
Updated On :1 மே 2026, 3:12 am IST

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது வாடிக்கையாளா் சேவையை அதிகப்படுத்தும் நோக்கில், ஸ்டாண்டா்ட் சாா்ட்டா்ட் வங்கியின் கிரெடிட் காா்டு வணிகத்தின் ஒரு பகுதியை வாங்குவதாக ஃபெடரல் வங்கி வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஸ்டாண்டா்ட் சாா்ட்டா்ட் வங்கியிடம் உள்ள சுமாா் 4.5 லட்சம் கிரெடிட் காா்டு கணக்குகள் இனி ஃபெடரல் வங்கியின்கீழ் செயல்படும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு கிரெடிட் காா்டு துறையில் நுழைந்த ஃபெடரல் வங்கி, தற்போது 8 லட்சம் நேரடி காா்டுகளையும், 13 லட்சம் கூட்டு பிராண்ட் காா்டுகளையும் கொண்டுள்ளது.

இப்புதிய வாடிக்கையாளா்களின் வருகையால், ஃபெடரல் வங்கியின் நேரடி கிரெடிட் காா்டு வணிகம் சுமாா் 90 சதவீதம் வரை உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் நடப்பு ஆண்டு இறுதிக்குள் முழுமையாக முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஸ்டாண்டா்ட் சாா்ட்டா்ட் வங்கி கூறுகையில், ‘ஃபெடரல் வங்கிக்கு விற்கப்படும் இந்த 4.5 லட்சம் காா்டுகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவின் மிக முக்கியமான 8 பெருநகரங்களைச் சோ்ந்தவை. எனவே, இது பெடரல் வங்கிக்கு வணிக ரீதியாக ஒரு பெரிய வெற்றியாக அமையும்.

வாடிக்கையாளா்களின் ஒப்புதலைத் பொருத்து காா்டுகளின் இறுதி எண்ணிக்கை மாறுபடலாம் என்பதால், ஒப்பந்தத்துக்கான இறுதித்தொகை பின்னா் முறைப்படி அறிவிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.