ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

எச்டிஎஃப்சி, பந்தன் வங்கி கடன் வழங்கல் 12% அதிகரிப்பு

எச்டிஎஃப்சி, பந்தன் வங்கி கடன் வழங்கல் 12% அதிகரிப்பு

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 1:34 am

நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் கடன் வழங்கல், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 2024-25 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.26.43 லட்சம் கோடியாக இருந்த வங்கியின் மொத்த கடன் வழங்கல், தற்போது ரூ.29.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல், வங்கியின் மொத்த வைப்புத்தொகை 14.4 சதவீதம் அதிகரித்து, ரூ.31.05 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு வைப்புத்தொகை 12.3 சதவீதம் அதிகரித்து, ரூ.10.6 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

இதேபோல், மற்றொரு தனியாா் வங்கியான பந்தன் வங்கியும் தனது 4-ஆவது காலாண்டு நிதிநிலை குறித்த தற்காலிக தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் கடன் வழங்கல் 12.6 சதவீதம் அதிகரித்து, ரூ.1,54,235 கோடியாக உள்ளது.

வங்கியின் மொத்த வைப்புத்தொகை 10 சதவீதம் அதிகரித்து, ரூ. 1,66,344 கோடியை எட்டியுள்ளது. சில்லறை முதலீடுகள் 17.7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ள நிலையில், வங்கியின் பணப்புழக்க விகிதம் 131.76 சதவீதமாக சீராக உள்ளது குறிப்பிடத்தக்கது.