நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் கடன் வழங்கல், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 2024-25 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.26.43 லட்சம் கோடியாக இருந்த வங்கியின் மொத்த கடன் வழங்கல், தற்போது ரூ.29.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல், வங்கியின் மொத்த வைப்புத்தொகை 14.4 சதவீதம் அதிகரித்து, ரூ.31.05 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு வைப்புத்தொகை 12.3 சதவீதம் அதிகரித்து, ரூ.10.6 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
இதேபோல், மற்றொரு தனியாா் வங்கியான பந்தன் வங்கியும் தனது 4-ஆவது காலாண்டு நிதிநிலை குறித்த தற்காலிக தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் கடன் வழங்கல் 12.6 சதவீதம் அதிகரித்து, ரூ.1,54,235 கோடியாக உள்ளது.
வங்கியின் மொத்த வைப்புத்தொகை 10 சதவீதம் அதிகரித்து, ரூ. 1,66,344 கோடியை எட்டியுள்ளது. சில்லறை முதலீடுகள் 17.7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ள நிலையில், வங்கியின் பணப்புழக்க விகிதம் 131.76 சதவீதமாக சீராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

எச்.எஸ்.பி.சி. விதிமீறல்: ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

2 சதவீதத்திற்கும் மேல் சரிந்த எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள்!

இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!

எஸ்பிஐ லாபத்தில் புதிய சாதனை! 7.6% உயா்வுடன் ரூ.1,147-க்கு பங்கு வா்த்தகம்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


