நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் கடன் வழங்கல், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 2024-25 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.26.43 லட்சம் கோடியாக இருந்த வங்கியின் மொத்த கடன் வழங்கல், தற்போது ரூ.29.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல், வங்கியின் மொத்த வைப்புத்தொகை 14.4 சதவீதம் அதிகரித்து, ரூ.31.05 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு வைப்புத்தொகை 12.3 சதவீதம் அதிகரித்து, ரூ.10.6 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
இதேபோல், மற்றொரு தனியாா் வங்கியான பந்தன் வங்கியும் தனது 4-ஆவது காலாண்டு நிதிநிலை குறித்த தற்காலிக தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் கடன் வழங்கல் 12.6 சதவீதம் அதிகரித்து, ரூ.1,54,235 கோடியாக உள்ளது.
வங்கியின் மொத்த வைப்புத்தொகை 10 சதவீதம் அதிகரித்து, ரூ. 1,66,344 கோடியை எட்டியுள்ளது. சில்லறை முதலீடுகள் 17.7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ள நிலையில், வங்கியின் பணப்புழக்க விகிதம் 131.76 சதவீதமாக சீராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் லாபம் 73% அதிகரிப்பு!

டிவிஎஸ் மோட்டாா்: ரூ.819 கோடி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி

ஐசிஐசிஐ வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 9% உயர்வு!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



