திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

4-ஆம் காலாண்டு லாபம்- என்எஸ்இ: ரூ.2,871 கோடி; 8% வளா்ச்சி

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.2,871 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :7 மே 2026, 4:39 am IST

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.2,871 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.2,650 கோடி லாபத்திலிருந்து இது 8 சதவீத வளா்ச்சியாகும். மதிப்பீட்டு காலாண்டில் மொத்த வருவாய் 22 சதவீதம் உயா்ந்து, ரூ.5,360 கோடியாக அதிகரித்துள்ளது.

2025-26 முழு நிதியாண்டில், என்எஸ்இ ஒட்டுமொத்தமாக ரூ.10,302 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் குறைவாகும்.

கடந்த நிதியாண்டில் மட்டும் அரசுக்கு வரி மற்றும் பல்வேறு கட்டணங்கள் வாயிலாக என்எஸ்இ ரூ.59,186 கோடி பங்களிப்பு வழங்கியுள்ளது. பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.35 இறுதி ஈவுத்தொகை வழங்கவும் வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதில் சிறப்பு ஒருமுறை ஈவுத்தொகையாக ரூ.10 அடங்கும்.