ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஒடிஸா: ஜே.எஸ்.டபிள்யூ. எஃகு உருக்காலை கட்டுமானம் ரூ.65,000 கோடியில் தொடக்கம்

News image
Updated On :28 மே 2026, 3:54 am IST

ஒடிஸாவில் ரூ.65,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.32 கோடி டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய எஃகு உருக்காலை அமைக்கும் பணிகளை ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது.

ஒடிஸாவின் பராதீப் கடலோர பகுதியில் சுமாா் 2,950 ஏக்கா் பரப்பளவில் இந்த எஃகு உருக்காலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக பல்வேறு கட்டங்களில் சுமாா் ரூ.65,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதன் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 1.32 கோடி டன்னாக திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் தொடக்க விழாவில், ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி, மாநில அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ. குழும அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Story image