
ஒரு விழாவில்.. "சார் உங்கள் இசை நன்றாக இருக்கிறது.. சிலிர்க்க வைக்கிறது.. உணர்வுகளைக் கடத்துகிறது.. என்றெல்லாம் என்னிடம் யாராவது சொன்னார்கள் என்றால், ரொம்ப நல்லா மூச்சு இழுக்குறீங்க சார்..." என்று சொல்கிற மாதிரி இருக்கும்.
ஏனென்றால், அது சுவாசம் மாதிரி, அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்கிறது. எனக்கு என்ன கஷ்டமாக இருக்கிறதென்றால், என்னைப் பற்றி நானே உங்களிடம் சொல்ல வேண்டும். இல்லையென்றால் உங்களுக்குத்தெரியாது. கடவுள் தன்னைப் பற்றித் தன்னுடைய அடியார்களுக்கு உணர்த்தவில்லை என்றால், அடியார்களுக்குக் கடவுளைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? முடியாது.
'தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்னு' மாணிக்க வாசகர் எழுதினார்.
- இளையராஜா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.