இது எப்போது என்றால், எவ்வித ஈர்ப்பலையும் இல்லாத பட்சத்தில். அதாவது, கால-வெளி (நீளம் அகலம் உயரம் - ஆகிய பரிமாணங்கள்) நீட்சியோ சுருக்கமோ அடையாது. ஆனால், ஒரு ஈர்ப்பலை பூமியைக் கடந்து செல்லும்போது, பூமியின் ஆரம் ஒரு அணுவின் விட்டத்தின் அளவில் மாற்றமடைந்து, மீண்டும் சரியாகும். இதனால், இந்தச் சுரங்கப்பாதைகளில் ஒன்று நீட்சி அடையும்; மற்றொன்று சுருங்கும். நீண்டு சுருங்கும் எனச் சொல்வது – காலமும் வெளியும் கலந்த ஒன்றை. அதாவது, பூமியின் ஓரிடத்தில் காலம் மெதுவாகவும், மற்றோர் இடத்தில் கொஞ்சம் அதிகமாகவும் செல்லும் - மிக மிக நுண்ணிய அளவில். இதைத்தான் அளவிட வேண்டும். ஒளி அலைகளின் கச்சிதமான அலைவரிசை லயம் தப்பும். ஒரு ஒளிக் கதிர் அலையின் மேல் வளைவை மற்றொரு ஒளிக் கதிரின் கீழ் வளைவு சமனப்படுத்த இயலாது. விளைவாக, ஒளி வந்தடையும் கருவியில் ஒளி தென்படும்.