ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு, அறிவியலின் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் உண்டு. ஆபிரகாம் மாஸ்லொவ், அறிவியல் குறித்துப் பேசும்போது, அது சமய உணர்விலிருந்து தன்னை முழுமையாகத் துண்டித்துகொள்வதால், பெரும் மதிப்பீட்டுப் பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும் என்று கூறினார். இதற்கான சிறந்த உதாரணமாக அவர் கூறியது, நாஸி ஜெர்மனியில் மனிதர்கள் மீது அறிவியலாளர்கள் செய்த கொடூரமான பரிசோதனைகள். குறிப்பாக, (இந்திய வம்சாவளியினரான) ஜிப்ஸி குழந்தைகள் மீது மானுடத்தன்மை சிறிதும் அற்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. இத்தகைய காலகட்டத்தில்தான், மானுடத்தின் மிகச்சிறந்த அறிவியலாளராக இருந்த ஐன்ஸ்டைன், அமைதி குறித்தும், மானுட சமத்துவம் குறித்தும் பேசினார். அத்துடன், தம் அறிவியல் தேடலுக்கு அடிப்படையாக, மானுட மதங்கள் கடந்த பெரும் சமய உணர்வு குறித்தும் பேசினார்: