“இந்தியா முழுவதும் நான் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்துள்ளேன். ஒரேயொரு பிச்சைக்காரனையோ அல்லது திருடனையோ நான் பார்க்கவில்லை. அப்படியொரு செல்வச் செழிப்பும், உயர்ந்த பண்புகளும், சிறப்புகளும் கொண்ட நாடு அது. அந்த நாட்டின் முதுகெலும்பை உடைத்தாலன்றி அந்த நாட்டை நம்மால் வெற்றிகொள்ளவே முடியாது என்றே நினைக்கிறேன். அதன் ஆன்மிக, கலாசார பாரம்பரியம்தான் அந்த முதுகெலும்பு. அதனால், இந்தியாவின் பண்டைய கல்வி முறையை அடியோடு களைந்து மாற்றிவிட வேண்டும். அப்போதுதான் அந்நியத்தன்மை கொண்ட எதுவும், குறிப்பாக ஆங்கிலமும், ஆங்கிலக் கல்வியும், தம் நாட்டினதைவிட எல்லா வகையிலும் உயர்ந்தது என்று இந்தியர்கள் நினைப்பார்கள். அப்படி ஒரு நினைப்பை அவர்களிடம் விதைத்துவிட்டால், அவர்கள் நாளடைவில் தம் சுயமரியாதையையும், பண்பாட்டையும் நிச்சயம் இழப்பார்கள். அதன்பிறகு, நாம் விரும்புவதைப்போல, நம் அடிமை நாடாக மாறிவிடுவார்கள்”. மெக்காலேயின் பேச்சின் நீட்சியாகத்தான் நான் அலோபதி மருத்துவத்தைப் பார்க்கிறேன்.