சர்க்கரை நோய், நீரிழிவு நோய், டயபட்டிஸ் மெலீட்டஸ் என்றெல்லாம் சொல்லப்படும் நோயானது, ஒரு பயங்கரமான நோயாகும். அதில் டைப் 1, டைப் 2, கெஸ்டேஷனல் டயபட்டிஸ் என்றெல்லாம் உண்டு. இந்த நோய் முற்றினால் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இதன் கடுமையின் காரணமாக, கண் பார்வை போகலாம், கை, கால் விரல்கள் போன்ற உறுப்புகளில் ரத்த ஓட்டம் நடைபெறாமல், அந்த உறுப்புகளை வெட்டி எடுக்க நேரிடலாம், சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம், செயலிழக்கலாம், இதய அடைப்பு ஏற்பட்டு இறக்கலாம், இன்னும் என்னென்னவோ நடக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் அது பாண்டோரா பெட்டியைத் திறந்த மாதிரி. எல்லா நோய்ச்சனியன்களும் ஒவ்வொன்றாக வந்து கடைசியில் உயிரைக் குடித்துவிடும்.