மயக்கம் வருவதுபோல் இருக்கும்போது, நாம் சர்க்கரையை சாப்பிட்டால் என்ன நடக்கிறது தெரியுமா? வாயிலிருந்து வயிற்றிலிருந்தும், உமிழ்நீரின் உதவியுடனும், வயிற்றின் இயக்கத்தின் காரணமாகவும், இன்ஸ்டன்ட் காஃபி மாதிரி உடனடி க்ளுக்கோஸ் பிரிக்கப்பட்டு ரத்தத்துடன் கலக்கிறது. அப்போது வயிற்றில் அதிகமான வெப்பம் உண்டாகிறது. ஏன்? ஏனெனில், க்ளுக்கோஸ் என்பது ஒரு எரிசக்தி. ஆனால், அந்த வெப்பம் வயிற்றை சுட்டெரித்துவிடாமல் இருக்க, உடனே அட்ரீனலின் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. அட்ரீனலின் சுரந்தால் கல்லீரலில் இருந்து க்ளைக்கோஜன் வெளியேற்றப்படும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். க்ளைக்கோஜன் என்ற அந்தச் சக்தி மிகுந்த க்ளுக்கோஸின் அளவு ரத்த ஓட்டத்தில் அதிகமாகி உடல் உறுப்புகளுக்கு, முக்கியமாக வயிற்றுக்கு, தேவையான ஊட்டச்சக்தியை அளிக்கிறது. டயாபடீஸுக்கான அலோபதி மருந்துகளால் ஏற்படும் சர்க்கரைக் குறைவையும், அது ஏற்படுத்திய மயக்கம், கை கால் நடுக்கம் இத்யாதிகளையும் க்ளைக்கோஜன் சீர்படுத்துகிறது!