அதிகமாக உண்ணுதல், மிகக்குறைவாக உண்ணுதல், மிருகக் கொழுப்புள்ள உணவுகளை அதிகமாக உண்ணுதல், புகைப்பிடித்தல், கார்களிலிருந்து வெளியாகும் புகை, மனஇறுக்கம், அதிக உடல் எடை, உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லாமல் இருத்தல், உட்கார்ந்துகொண்டே இருத்தல் – இப்படி, மாரடைப்பு (இதய நோய்) ஏற்படுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஏன், குறட்டைவிடுவதுகூட ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது! அடப்பாவிகளா, நிம்மதியா தூங்கக்கூட விடமாட்டார்கள் போலிருக்கிறதே என்று நீங்கள் புலம்புவது என் காதில் விழுகிறது! என்ன செய்வது, நானும் உங்கள் ஜாதிதான்!