இயற்கை உஷ்ணமான வெய்யில் பட்டு விளைந்த, சமையல் நெருப்பு படாத, இயற்கை உணவுகள். பழங்கள், காய்கறிகள், சிறு தானிய வகைகள். முக்கியமாகத் தேங்காய். மூன்று வேளையும். அல்லது, பசிக்கும்போதெல்லாம். அரை மூடி - ஒரு மூடி என்று தேங்காயைத் துருவி அவர் மென்று சாப்பிட்டார். அதோடு, பழங்கள் இன்னபிற. ரொம்பக் கஷ்டம்தான். அடிக்கடி பசிக்கும். ஏனெனில், சமைத்த உணவுகளைப்போல் ஃபுல் மீல்ஸ் கொடுத்து வயிறை ‘பேக்’ பண்ணுவது சாத்தியமில்லை. பசித்தபோதெல்லாம் தேங்காய்த் துருவல் அல்லது பழங்கள்தான். ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் மாதிரி, மூன்றே மாதங்களில் தொழுநோய் முற்றிலுமாகக் குணமானது!