இயற்கையாகவே உடல் உருவாக்கிக்கொள்ளும் எதற்கும் இணையான ஒன்றை வெளியிலிருந்து, மானிட தயாரிப்பின் மூலம் ஈடுகட்டவே முடியாது என்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. டியூப்ளிகேட் பொருளுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தி விநியோகத்துக்கு அனுப்புவது மாதிரியான செயல் அது. உதாரணமாக, நம் உணவில் கால்சியம், இரும்புச் சத்து, புரோட்டீன், விட்டமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துகள் உள்ளன. ஆனால் கால்சியம், புரோட்டீன், விட்டமின் மாத்திரைகளெல்லாம் மருந்துக் கடைகளில் கிடைக்கத்தானே செய்கின்றன? உணவுக்குப் பதிலாக தேவையான சத்துகளை மாத்திரைகளாக நேரடியாக ஏன் நாம் சாப்பிடக்கூடாது? சமைக்கின்ற வேலையும் நேரமும் மிச்சமாகும் அல்லவா?