தேவையான பொருட்கள்
கேப்பை- 1 கிலோ
கேப்பையை களைந்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஓரீரவு ஒரு மெல்லிய துணியில் போட்டு வைக்கவும். மறு நாள் காயவைக்கவும்.
காய்ந்த உடன் வறுத்து மாவு ஆலையில் அரைத்து வைக்கவும்.
மாவு-1 கிண்ணம்
மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். சிறிய கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
பழுத்த நேந்திரம் பழம் - 2
பழத்தின் தோல் உரித்து வில்லைகளாக (சுமார் 2 இன்ச் தடிமன்) நறுக்கவும். கொழுக்கட்டை வேக வைக்கும் போதே பழத்தையும் இட்லித் தட்டின் துளைகள் உள்ள
பகுதியில் வைத்து வேகவிடவும். அதாவது பழத்தின் கீழ் நீர் தேங்கும் வாய்ப்பு இருந்தால் பழத்தின் ருசி குறையும்.
புதிதாக உடைத்த தேங்காய் - 1 மூடி
தேங்காய் சில் கீறி அதன் பின்னால் உள்ள தோலைச் சீவி எடுத்து வைக்கவும்.
சாப்பிடும் முறை:
தேங்காய் சில் ஒரு கடி, ஒரு கொழுக்கட்டை என சாப்பிடவும். இடையில் நேந்திரம் பழம் சாப்பிடவும். ஒரு தட்டில் கொழுக்கட்டைகளைக் கொட்டி சுற்றிலும் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டால் உடனே காலியாகிவிடும். இதுவும் சரிவிகித உணவுதான்.

மரகத மீனாட்சி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 4 - நேரலை!

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்! திமுக புறக்கணிப்பு!

கர்நாடக அமைச்சரவையில் மகளிர் இடம்பெறாதது ஏமாற்றம்: காங்கிரஸ் தலைவர்

இந்திய அணியில் விராட் கோலிக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்?
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி



