கேரட் பக்கோடா

செய்முறை:  முதலில் கடலைப் பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊற வைத்து பின்னர் நீரை வடிகட்டிவிட
கேரட் பக்கோடா
Updated on
1 min read

தேவையானவை:

கேரட் : 200 கிராம்.

கடலைப்பருப்பு - 100 கிராம்

மிளகாய் வற்றல் - 6

ரவை - 1 மேசைக் கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

மிளகுப் பொடி - இரண்டு சிட்டிகை

வெங்காயம் பெரியது - 2

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:  முதலில் கடலைப் பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊற வைத்து பின்னர் நீரை வடிகட்டிவிட வேண்டும். பருப்பில் மிளகாய் வற்றல், சோம்பு போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர்,பருப்புக்கலவையுடன் துருவிய கேரட்,  பொடியாக நறுக்கிய வெங்காயம், ரவை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து உதிரியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்த மாவை  உதிரி உதிரியாகக் கிள்ளிப் போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com