

தேவையானவை:
பச்சரிசி - 200 கி
பொரிகடலை - 200 கி
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
மோர் - 100 மில்லி
கறிவேப்பிலை - 1 பிடி
உப்பு, எண்ணெய் - தேவையானது
செய்முறை: முதலில் பச்சரிசியை ஊறவைத்து முக்கால் பதமாக அரைக்கும் போது பொரி கடலையையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். உடனே தோசை செய்ய வேண்டுமானால் மாவுடன் சிறிதளவு மோர் கலந்து கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலையும் போட்டு கலந்து கொள்ள வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி மாவை ஊற்றி சுட்டெடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.