மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

பயத்தம் பருப்பு மசியல்

Published On :

தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 200 கிராம்
மஞ்சள் பொடி - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
சின்ன வெங்காயம் -  100 கிராம்
தக்காளி - 2
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
தனியா பொடி  - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி, புதினா தழை - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: பயத்தம் பருப்புடன், தோல் நீக்கி தட்டிய இஞ்சி, மஞ்சள் பொடி, தக்காளி சேர்த்து குக்கரில் வைத்து வேகவிட்டு மசித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் உரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். குக்கரில் வெந்த பருப்போடு சின்ன வெங்காயம், மிளகாய் பொடி, தனியா பொடி, உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.


கொதித்துப் பொடி வாசனை அடங்கியதும். பின்னர், எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளித்து கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கி கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொட்டவும். புதினா, கொத்தமல்லி இலை தூவவும். நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான பயத்தம் பருப்பு மசியல் தயார்.

இதை ரைஸ், இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், ஆப்பம், சப்பாத்தி ஆகியவற்றோடு பரிமாற சுவையாக இருக்கும்.


மருத்துவ குணங்கள்: பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.