பன்னீர் வடை

ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர்
பன்னீர் வடை
Updated on
1 min read

தேவையானவை:
காளான் - அரை கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
பன்னீர் - அரை கிண்ணம் (துருவியது)
கறிவேப்பிலை சிறிதளவு - (பொடியாக நறுக்கியது)
சோம்பு -  ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் -  2
கடலை மாவு - இரண்டு தேக்கரண்டி
அரிசி மாவு - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர், கறிவேப்பிலை, சோம்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான பன்னீர் வடை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com