சென்னை கே.கே.நகர் (மேற்கு) 137ஆவது வட்டம் 61-ஆவது தெருவில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் உள்ளது.
இந்த மைதானத்தில் காலை முதல் இரவு 10 மணி வரை சில இளைஞர்கள் கூச்சலிட்டபடி விளையாடுகிறார்கள். இதனால் அப்பகுதியில் வசிக்கும் முதியவர்கள், நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களும் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்களின் நலன் கருதி, மைதானத்தை பூட்டிவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.