மயில் விருத்த பலச்ருதிக்கான பொருளைப் பார்ப்போம்.
பதச் சேதம் | சொற் பொருள் |
| எந்நாளும் ஒரு சுனையில் இந்த்ர நீலப்போது இலங்கிய திருத்தணிகை வாழ் | சுனை: நீர்நிலை; இந்த்ர நீலப் போது: இந்திர நீலம் எனப்படும் நீலோத்பல மலர் |
| எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும் ஒரு நம்பிரான் ஆன மயிலைப் | எம்பிரான்: எம் தலைவர்; இமையவர்கள்தம் பிரான்: தேவர்களின் தலைவன்; ஒரு: ஒப்பற்ற; நம் பிரான்: நம் தலைவனான மயிலை |
| பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன் பகர்ந்த அதிமதுர சித்ரப் | பன்னாளும்: பலநாட்களாக; அடிபரவும்: அடி போற்றும்; அதிமதுர: மிக இனிமையான; சித்ர: வேலைப்பாடு நிறைந்த |
| பாடல் தரும் ஆசறு விருத்தம் ஒரு பத்தும் படிப்பவர்கள் | ஆசு அறு: குற்றமற்ற |
| ஆதி மறை நூல்மன் நான்முகம் பெறுவர் அன்னம் ஏறப் பெறுவர் வாணி தழுவப் பெறுவரால் | தொன்மையான வேதங்கள் தன்னிடத்திலே நிலைபெற்றுள்ள; (மன்: நிலை பெற்ற); நான்முகம் பெறுவர்: நான்கு முகங்களைப் பெற்று பிரம பதத்தை அடைவர்; |
| மகராலயம் பெறுவர் உவணம் ஏறப் பெறுவர் வாரிச மடந்தையுடன் வாழ் | மகராலயம்: கடல், கடலுக்கு அதிபனான வருணனுடைய பதம்; உவணம்: கருடன்; வாரிசம்: வாரிஜம், தாமரை |
| அந்நாயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர் அமுதாசனம் பெறுவர் மேல் | அந்நாயகம்: அந்த (விஷ்ணு) பதம்; ஐராவதம் பெறுவர்: இந்திர பதம் பெறுவர்; அமுத அசனம் பெறுவர்: அமுதத்தை உண்ணப் பெறுவர்; அதற்குமேல் |
| ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர் அழியா வரம் பெறுவரே. | ஆயிரம் பிறைதொழுதல்: சதாபிஷேகம் என்னும் எண்பது வயது நிறையப் பெறுதல்; |
</p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/235549298&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="JUSTIFY"><br /><strong>எந்நாளும்</strong> ... நாள் தவறாமல், ஒவ்வொரு நாளும்,</p><p align="JUSTIFY"><strong>ஒரு</strong> ... ஒப்பற்ற,</p><p align="JUSTIFY"><strong>சுனையில்</strong> ... நீர் நிலையில்,</p><p align="JUSTIFY"><strong>இந்திர நீலப்போது இலங்கிய</strong> ... இந்திரநீலம் எனப்படும் நீலோற்பல<br />மலர் பூத்து விளங்குவதாகிய,</p><p align="JUSTIFY"><strong>திருத்தணிகை வாழ்</strong> ... தணிகை மலையில் வாழும், (செங்கழுநீர் மலர்வதால் திருத்தணிக்குக் கல்லார கிரி என்றும் பெயருண்டு)</p><p align="JUSTIFY"><strong>எம் பிரான்</strong> ... எமது இறைவனாகிய முருகன்,</p><p align="JUSTIFY"><strong>இமையவர்கள் தம்பிரான்</strong> ... தேவர்களுடைய தலைவன்,</p><p align="JUSTIFY"><strong>ஏறும்</strong> ... வாகனமாக ஏறும்,</p><p align="JUSTIFY"><strong>ஒரு நம்பிரான் ஆன மயிலை</strong> ... ஒப்புவமை இல்லாததும், நம்முடைய வழிபடு தெய்வதமுமான மயிலை,</p><p align="JUSTIFY"><strong>பன்னாளும் அடி பரவும்</strong> ... பல நாட்களாக துதித்துப் போற்றும்,</p><p align="JUSTIFY"><strong>அருணகிரி நாதன்</strong> ... அருணகிரிநாதனாகிய நான்,</p><p align="JUSTIFY"><strong>பகர்ந்த</strong> ... சொன்ன,</p><p align="JUSTIFY"><strong>அதிமதுர</strong> ... இனிமை நிறைந்ததும்,</p><p align="JUSTIFY"><strong>சித்ர</strong> ... வேலைப்பாடுகளுடன் கூடிய அழகுகள் நிறைந்ததும்,</p><p align="JUSTIFY"><strong>பாடல் தரும்</strong> ... பாடல்களாக விளங்குகின்ற,</p><p align="JUSTIFY"><strong>ஆசு அறு</strong> ... குற்றமற்ற,</p><p align="JUSTIFY"><strong>விருத்தம் ஒரு பத்தும்</strong> ... இந்தப் பத்து விருத்தங்களையும்,</p><p align="JUSTIFY"><strong>படிப்பவர்கள்</strong> ... பாராயணம் செய்பவர்கள்,</p><p align="JUSTIFY"><strong>ஆதி மறை நூல்</strong> ... மிகவும் பழமையான வேதங்கள்,</p><p align="JUSTIFY"><strong>மன்</strong> ... நிலை பெற்று விளங்கும்,</p><p align="JUSTIFY"><strong>நான்முகம் பெறுவர்</strong> ... பிரமனுக்குரிய நான்கு முகங்களையும் பெற்று அவனுடைய சொரூபத்தைப் பெறுவார்கள்,</p><p align="JUSTIFY"><strong>அன்னம் ஏறப் பெறுவர்</strong> ... (பிரமனுடைய வாகனமான) அன்னத்தின் மேல் ஏறிச் செல்லும் பதத்தைப் பெறுவார்கள்,</p><p align="JUSTIFY"><strong>வாணி தழுவப் பெறுவர்</strong> ... கலைமகளான சரஸ்வதியின் கடாட்சத்தைப் பெற்று அவரிடமிருந்து நீங்காதிருப்பார்கள். (நாவிற் சரஸ்வதி நற்றுணையாக என்று சஷ்டி கவசம் குறிப்பதைப்போல்),</p><p align="JUSTIFY"><strong>மகராலயம் பெறுவர்</strong> ... (சுறா, திமிங்கிலங்கள் போன்ற) மகரமீன்கள் வாழ்கின்ற கடலுடைய தலைவனான வருண பதவியையும் பெறுவார்கள்;<br /><br /><strong>உவணம் ஏறப் பெறுவர்</strong> ... கருட வாகனத்தில் ஏறுவார்கள்,</p><p align="JUSTIFY"><strong>வாரிச மடந்தையுடன் வாழ் அந்நாயகம் பெறுவர்</strong> ... வாரிஜமாகிய தாமரையில் வீற்றிருப்பவளான திருமகளோடு வாழும் விஷ்ணுபதத்தைப் பெறுவார்கள்,</p><p align="JUSTIFY"><strong>அயிராவதம் பெறுவர்</strong> ... தேவேந்திர பதம் பெற்று ஐராவதத்தில் உலா வருவார்கள்,<br /><br /><strong>அமுதாசனம் பெறுவர்</strong> ... அமுத அசனம்=அமுதத்தை அருந்துதல். (தேவேந்திர பதத்தையே பெற்றதாலே) அமுதத்தையும் பருகுவார்கள்.</p><p align="JUSTIFY"><strong>மேல் ஆயிரம் பிறை தொழுவர்</strong> ... ஆயிரம் பிறைகளைக் கண்டு, சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். (ஓராண்டில் பன்னிரண்டுக்குச் சற்று கூடுதலான மூன்றாம் பிறைகளைக் காணலாம். பத்தாண்டுகளுக்கு 125 பிறைகள் என்று கணக்கு. ஆயிரம் பிறை காணும்போது எண்பது வயது பூர்த்தியாகியிருக்கும். ஆயிரம் பிறை தொழுதல் என்பது சதாபிஷேகத்தைக் குறிக்கும்.)</p><p align="JUSTIFY"><strong>சீர் பெறுவர் பேர் பெறுவர்</strong> ... மிகச் சிறந்த பெருமையும் புகழும்<br />அடைவார்கள்,<br /><br /><strong>அழியா வரம் பெறுவர்</strong> ... அழியாத முக்தி நிலையையும் அடைவார்கள்</p><p align="JUSTIFY">மயில் விருத்தம் இத்துடன் முற்றுப் பெறுகிறது. </p><p align="JUSTIFY">அடுத்ததாக, சேவல் விருத்தத்தைத் தொடங்குவோம்.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

