பதச் சேதம் | சொற் பொருள் |
| தானாய் இடும்பு செயு மோகினி இடாகினி தரித்த வேதாள பூதம் | இடும்பு: இடும்பை—துன்பம்; இடாகினி: டாகினி (பிணந்தின்னும் பேய்); தரித்த: (இவற்றோடு) சேர்ந்து (இருப்பதான) |
| சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித் தடிந்து சந்தோடம் உறவே | சருவ: சர்வ; அங்கிரி: கால், பாதம்; தடிந்து: அழித்தல், குறைத்தல்; சந்தோடம்: சந்தோஷம், மகிழ்ச்சி |
| கோனாகி மகவானும் வானாள வானாடர் குலவு சிறை மீள | கோனாகி: கோன் ஆகி—மன்னனாகி; மகவான்: இந்திரன்; வானாடார்: வான நாட்டில் இருப்பவர்களான தேவர்கள்; குலவு: இருக்கும்; (முந்தைய அடியிலுள்ள சந்தோடமுறவே என்பதை, மகவானும் கோனாகி சந்தோடமுறவே என்று கொண்டுகூட்டிக் கொள்கிறோம்.) |
| அட்ட குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள் கொட்டி எட்டிக் கூவுமாம் | அட்ட: அஷ்ட; குலகிரி: சிறந்த மலைகள்; அசுரர்கிளை: அசுரர்களை உறவினரோடு கூட்டமாக; வெஞ்சிறை: (பகைவர்களுக்கு) வெம்மையான; சிறைகள்: சிறகுகளை |
| மானாகம் அக்கு அறுகு மான் உடையன் நிர்த்தம் இடு மாதேவன் நல் குருபரன் | மானாகம்: மான், நாகம்; அக்கு: எலும்பு; அறுகு: அறுகம்புல்; மான் உடையான்: மான் தோலை உடையாக அணிந்தவன்; நிர்த்தம்: நடனம்; |
| வான் நீரம் அவனி அழல் காலாய் நவக்கிரகம் வாழ்நாள் அனைத்தும் அவனாம் | வான்: ஆகாயம்; நீரம்: நீர்; அவனி: பூமி; அழல்: அக்கினி; கால்: காற்று; வாழ்நாள்: வாழும் நாள்; |
| சேனாபதித் தலைவன் வேதாவினைச் சிறைசெய் தேவாதி கட்கு அரசு; கள் | வேதா: பிரமன்; தேவாதிகட்கு அரசு: தேவர்களுக்கெல்லாம் தலைவன். இந்த அடியின் இறுதியில் ‘கட்’ என்று நிற்பதை, ‘கள்’ என்று பிரித்து அடுத்த அடியோடு கூட்டுகிறோம். |
| தேன் ஆன மைக் கடலின் மீனானவற்கு இனியன் சேவற் றிருத்து வசமே. | கள் தேனான: கள்ளையும் தேனையும் போன்ற; மீன் ஆனவற்கு: மச்சாவதாரம் எடுத்தவரான திருமாலுக்கு; இனியன்: இனிமையானவன். |
</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/237786068&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"><br /><strong>தானாய்</strong> <strong>இடும்பு செய்யும்</strong>... (ஒருவரால் ஏவிவிடப்படாமல்) தானாகவே துன்பங்களை ஏற்படுத்துபவையான,</p><p align="JUSTIFY"><strong>மோகினி</strong> ... (நடுநிசியில் தனித்து நடக்கும் ஆடவர்களைப் பிடித்துக்கொள்வதான) மோகினி (என்ற பெண் பிசாசுகளும்),</p><p align="JUSTIFY"><strong>இடாகினி</strong> ... பிணங்களைத் தின்னுபவையான டாகினி எனப்படும் பேய்களும், <br /><br /><strong>தரித்த வேதாள பூதம்</strong> ... இவற்றோடு சேர்ந்திருப்பதான வேதாளங்களும், பூதங்களும், இவைகளுடன் கூடி இருக்கும் வேதாளங்கள், பூதங்கள்,</p><p align="JUSTIFY"><strong>சர்வ சூனியமும்</strong> ... சகலவிதமான சூனியங்கள், பில்லி ஏவல் போன்ற அனைத்தையும்,<br /><br /><strong>அங்கிரியினால் உதறி</strong> ... தன்னுடைய காலால் பிடித்துத் தூக்கி உதறி எறிந்தும்;</p><p align="JUSTIFY">(<em>அங்ரி — अङ्घ्रि) என்ற வடசொல்லுக்குப் பாதம் என்று பொருள். சேவல் தன் காலையே ஆயுதமாகக் கொண்டது. எனவே இதற்குக் காலாயுதம் என்றும் பெயருண்டு. இதனாலேயே, </em></p><p align="JUSTIFY"><em>வேலாயுதன்சங்கு சக்ராயுதன் விரிஞ் சன்னறியாச்</em></p><p align="JUSTIFY"><em>சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்</em></p><p align="JUSTIFY"><em><strong>காலா யுதக்கொடி யோ</strong>னரு ளாய கவசமுண்டென்</em></p><p align="JUSTIFY"><em>பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே</em></p><p align="JUSTIFY"><em>என்று கந்தரலங்காரத்தில் பாடினார். காலாயுதக் கொடியோன் அருளாகிய கவசம் உண்டு; நான் யமனோடேயே பகைத்துக் கொண்டாலும், என்பால் ஆயுதம் வருவதுண்டோ என்று கேட்கிறார்</em>)</p><p align="JUSTIFY"><strong>தடிந்து</strong> ... (அந்தப் பேய்களையெல்லாம் துண்டுகளாக) வெட்டிக் (குதறியும்),</p><p align="JUSTIFY"><br /><strong>மகவானும்</strong> ... இந்திரனும்,</p><p align="JUSTIFY"><strong>சந்தோடமுறவே</strong> ... மகிழ்ச்சியுற்று,</p><p align="JUSTIFY"><strong>கோனாகி</strong> .<strong> வானாள</strong>.. (மறுபடியும் தேவலோகத்தின்) அரசனாகும் படியும்;</p><p align="JUSTIFY"><strong>வானாடர் குலவு சிறை மீள</strong> ... வான் நாட்டவர்களான தேவர்கள் தாங்கள் சூரபதுமனிடம் அடைபட்டிருந்த சிறையிலிருந்து விடுபடும் படியும்;<br /><br /><strong>அட்ட குல கிரிகள்</strong> <strong>அசுரர் கிளை பொடியாக</strong>... எண்திசைகளிலும் உள்ள பெரிய (குல) மலைகள் அனைத்தும், (அவற்றோடு) அசுரக் கூட்டங்கள் மொத்தமும் பொடியாகிப் போகும்படியும்;</p><p align="JUSTIFY"><strong>வெஞ்சிறைகள் எட்டிக் கூவுமாம்</strong> ...(பகைவர்களுக்குக்) கொடியதாக (விளங்கும் தன்னுடைய) சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டும், எட்டியெட்டிக் குதித்துக்கொண்டும், பெருங்குரலெடுத்துக் கூவும்.</p><p align="JUSTIFY"> (அப்படிக் கூவுவது எது என்று கேட்டால்)</p><p align="JUSTIFY"> <br /><strong>மானாகம்</strong> ... மான், நாகம், (கையிலே மானையும், கழுத்திலே வாசுகி என்ற பெருநாகத்தையும்)</p><p align="JUSTIFY"><strong>அக்கு அறுகு மான் உடையன்</strong> ... எலும்பு மாலை, அறுகம்புல் ஆகியவற்றையும் தரித்தவரும்; மான்தோலை உடையாக உடுத்தவரும்;</p><p align="JUSTIFY">(<em>புலியதள் எனப்படும் புலித்தோலோடு மான்தோலும் சிவனுக்கு ஆடை என்பதைப் <strong>புள்ளி மான் உரி உடையீர் </strong>என்ற திருஞானசம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்)</em></p><p align="JUSTIFY"><br /><strong>நிர்த்தம் இடு மா தேவன்</strong> ...நடனமாடுபவருமான மஹாதேவனுக்கு,</p><p align="JUSTIFY"><strong>நற்குருபரன்</strong> ...நல்ல குருமூர்த்தியானவன்—தகப்பன் சாமியானவன்;</p><p align="JUSTIFY"><strong>வான்</strong> <strong>நீரம் அவனி அழல் காலாய்</strong>... ஆகாயம், நீர், பூமி, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்களாகவும்;</p><p align="JUSTIFY"><strong>நவக்கிரகம்</strong> ... ஒன்பது கிரகங்களாகவும்</p><p align="JUSTIFY"><strong>வாழ் நாள் அனைத்தும் அவனாம்</strong> ... (இவை அனைத்துக்கும் ஆயுட் காலமாகவும் அல்லது) காலம் எனப்படும் தத்துவமேயும் எல்லாமும் தானேயாகி விளங்குபவன்;</p><p align="JUSTIFY"><strong>சேனாபதித் தலைவன்</strong> ... தேவ சேனாபதி;</p><p align="JUSTIFY"><strong>வேதாவினை சிறை செய்</strong> ...பிரம்மனைச் சிறை செய்தவன்;</p><p align="JUSTIFY"><strong>தேவாதிகட்கரசு</strong> ... தேவர் ஆதிகளுக்கு எல்லாம்: தேவர் முதனாலவர்களுக்கெல்லாம் தலைவன்;</p><p align="JUSTIFY"><strong>கள் தேன் ஆன</strong> ... மதுவையும் தேனையும்போல,</p><p align="JUSTIFY"><strong>மைக் கடலில் மீனானவற்கு இனியன்</strong> ... கரிய கடலில் மீனாக — மச்சாவதாரம் எடுத்த — திருமாலுக்கு இனியவன்;</p><p align="JUSTIFY"><strong>சேவல் திரு துவசமே</strong> ... அப்படிப்பட்ட குருபரனுடைய கொடியில் விளங்குவதான சேவல்தான் அதுவாகும்.</p><p align="JUSTIFY"><em>பிறரால் ஏவப்படாமல் தானாகவே துன்பங்களை விளைவிக்கும் மோகினி, டாகினி, பேய், பூதம், சூனியம் என்ற இவற்றையெல்லாம் தன் காலாலே பற்றி உதறி எறிவதும்; இந்திரன் வானுலகுக்கு மீண்டும் தலைவனாகி மகிழ்ச்சியுறவும்; எட்டுக் குலமலைகளும், அசுரக் கூட்டங்களும் பொடியாகிப் போகவும், தனது கொடுமையான சிறகுகளை அடித்துக்கொண்டு எட்டிக் குதித்துப் பெருங்குரலால் கூவும். (எது அப்படிக் கூவுமெனில்)</em></p><p align="JUSTIFY"><em>மானையும், வாசுகி என்ற பாம்பையும், எலும்பு மாலையையும், அறுகம் புல்லையும் தரித்துத் திருநடனம் புரியும் மஹாதேவனுடைய குருவாக ஆனவனும்; ஆகாயம்; நீர், பூமி, நெருப்பு, காற்று என்ற பஞ்சபூதங்களும், நவக்கிரங்களும், காலம் என்ற கருத்தும் (தத்துவமும்) அத்தனையும் தானே ஆகி நிற்பவனும்; தேவர்களுடைய சேனைக்கு அதிபனும்; பிரமனைச் சிறையடைத்தவனும்; தேவர்களுக்கெல்லாம் தலைவனும்; கரிய கடலில் மச்சமாக அவதரித்த திருமாலுக்குத் தேன்போன்று இனிமையானவனும் — ஆன முருகப்பெருமானுடைய கையிலே விளங்கும் கொடியில் வீற்றிருப்பதான சேவலே அதுவாகும்.</em></p><p> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

