மௌனாலயப் பாடலின் பொருளைப் பார்ப்போம். முதலில் இந்தச் சந்தக் கட்டை உடைத்துச் சற்றுக் கலைத்துப் போடுவோம்.
பாடல் சேதம் | பொருள் சாரம் |
| அகலம் நீளம் யாதாலும் | நீள அகலங்கள் எதனாலும் |
| ஒருவராலும் ஆராய அரிய | யாராலும் ஆராய்வதற்கு அரிய |
| மோனமே கோயில் என மேவி | மௌனமே கோவில் என மேவி |
| அசையவே | (மனம்) அசைந்து, சலனப்பட்டு |
| க்ரியாபீடம் மிசைபுகா | கிரியா (மார்க்கத்து) பீடத்தில் ஏறாமல் |
| மகாஞான அறிவின் | மிகவும் உயர்ந்த ஞான, அறிவால் |
| ஆதர ஆமோத மலர் தூவி | அன்பு மகிழ்ச்சி (எனப்படும்) மலர்களைத் தூவி |
| சகல வேதன(ம்) அதீதம் | எல்லா வேதங்களுக்கும் மேற்பட்டதும் |
| சகல வாசக அதீதம் | எல்லா வாக்கியங்களுக்கும் மேற்பட்டதும் |
| சகல-மா க்ரிய அதீத சிவரூப | எல்லாப் பெரும் செய்கைகளுக்கும் மேற்பட்டதான, சிவ ரூபமான, |
| சகல சாதக அதீத | எல்லா (ஜாதக) பிறப்புக்கும் மேற்பட்டதும் |
| சகல வாசனா அதீத | எல்லா (வாசனா) அனுபவச் செறிவுக்கும் மேற்பட்டதுமான |
| தனுவை நாடி | புருவ மத்தியை (தநு: புருவ மத்தி) நாடி |
| மாபூசை புரிவேனே | பெரிய பூஜையைச் செய்வேனா. |
| விகடதார (விகடதர) | மாறுபாடு உள்ள |
| சூதான நிகள பாத போதூள விரக | வஞ்சகமுள்ள, (நிகள பாத) பந்தத்தில் விழுவதை (போதூள) அழியும்படி (விரக) துன்பப்படுத்துவனே |
| ராக போதார் | ஆசைகளை (அனுபவிப்பதில் பொழுதைப்) போக்குபவர்களான |
| அசுரர் கால! | அசுரர்களுக்கு எமனானவனே! |
| விபுத! மாலிகா! | (விபுத) தேவலோக (தேவதாரு) (மாலிகா) மாலை அணிந்தவனே |
| நீலமுக படாக மாயூர! (மயூர) | (நீலமுக) நீலத் தோற்றமுள்ள (படாக) திரைச்சீலையைப் (போர்த்தியது போன்ற) மயூர! (மயில் வாகனனே) |
| விமல! வ்யாபகா சீல அக! | பரிசுத்தனே! (வியாபக) எங்கும் நிறைந்தவனே (Omniscient)! சீலம் நிறைந்த உள்ளத்தவனே! |
| விநோத! | அற்புத மூர்த்தியே |
| ககன கூட | விண்ணுலகில் (உள்ள) |
| பாடீர தவள சோபித | (பாடீர) சந்தன[ம் பூசிய] (தவள) வெண்ணிற (சோபித) அழகை உடைய, |
| ஆளான | உனக்கு ஏவல் புரிவதும் |
| கவன பூதரம் ஆரூட! | (கவன) வேகமாக (பூதர) ஐராவதம் அல்லது பிணிமுகம் என்ற பெயரையுடைய (ஆரூட) எழுந்தருளுபவனே! |
| சதகோடி களபகாம வீர்! | நூறுகோடி களபக் கலவைச் சாந்தை (அணிந்த) மன்மதன்களை (ஒத்தவனே) |
| வீசு கரம் முக! ஆர! | (கரம்வீசும் முக!) ஒளிக்கிரணங்களை வீசும் (சூரியனைப் போன்ற) முகமுடையவனே! மாலையணிந்தவனே! |
| வேல் வீர! | வேல் ஏந்திய வீரனே! |
| கருணை மேருவே! | கருணையில் மேருவைப் போல உயர்ந்தவனே! |
| தேவர் பெருமாளே | தேவர்களுக்கு அதிபதியே! |
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய</strong> - இத்தனை நீளம், இத்தனை அகலம் என்று யாராலும் ஆராய்ந்த சொல்ல முடியாத</p><p align="JUSTIFY"><strong>மோனமே கோயில் என மேவி</strong> - மௌன நிலையையே என் ஆலயம் என்று கொண்டு அங்கே அடைந்திருந்து</p><p align="JUSTIFY"><strong>அசையவே க்ரியா பீடம் மிசை புகா</strong> - மனத்தில் அசைவேற்பட்டு, சலனவசப்பட்டு, கிரியை மார்க்கத்தை அனுசரித்து அதைப் பெரும்பீடமாக ஏற்றிவிடாமல்</p><p align="JUSTIFY"><strong>மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி</strong> - மிகப்பெரிய மெய்ஞானமாகிய அறிவோடு, (<strong>ஆதர</strong>) அன்பு (<strong>ஆமோத</strong>) மகிழ்ச்சி என்ற மலர்களைத் தூவி,</p><p align="JUSTIFY"><strong>சகல வேதன(ம்) அதீத சகல வாசக(ம்) அதீத</strong> - எல்லா வேதங்களுக்கும், எல்லா வாக்கியங்களுக்கும் (சொற்களுக்கும்) மேம்பட்ட (<strong>அதீத</strong>)</p><p align="JUSTIFY"><strong>சகல மா க்ரிய அதீத சிவரூப</strong> - எல்லாவிதமான சிறந்த செயல்களுக்கும் (<strong>க்ரியா</strong>) மேம்பட்ட (<strong>அதீத</strong>) சிவரூபமான,</p><p align="JUSTIFY"><strong>சகல சாதக அதீத சகல வாசன அதீத</strong> - எல்லா (ஜாதக) பிறவிகளுக்கும், எல்லா வகையான அனுபவச் செறிவுக்கும் மேற்பட்டதான</p><p align="JUSTIFY">வாசனா என்பது பலவிதங்களான அனுபவங்களின் திரட்சி.</p><p align="JUSTIFY">வாசனாத் வாசுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம்</p><p align="JUSTIFY">ஸர்வபூத நிவாஸ்வோஸி வாசுதேவ நமோஸ்துதே என்பார்கள். வாசனைகளை ஆள்பவன் வாசுதேவன்.</p><p align="JUSTIFY"><strong>தனுவை நாடி மா பூசை புரிவேனோ</strong> - புருவ மத்தியில் மனத்தை நிலைநிறுத்தி, பெரும்பூசையைச் செய்யும் பாக்கியத்தை அடைவேனோ!</p><p align="JUSTIFY"><strong>விகட தார சூதான நிகள பாத போதூள</strong> - (<strong>விகடதார அல்லது தர) </strong>மாறுபட்டதும், வஞ்சகம் நிறைந்ததுமான (<strong>நிகளபாத போதூள</strong>) பந்தத்தில் அகப்பட்டு விழுவதை அழித்துத் தூளக்குபவனே!</p><p align="JUSTIFY"><strong>விரகர் ராக போதார் அசுரர் கால</strong> - (<strong>விரகர்</strong>) தந்திரம் உடையவர்களும் (<strong>ராக</strong>) ஆசை அல்லது காமம் கொண்டு அதனை அனுபவிப்பதில் (<strong>போதார்</strong>) போகின்ற அசுரர்களுக்கு யமனாக நின்று அழிப்பவனே!</p><p align="JUSTIFY"><strong>விபுத மாலிகா நீல முக படாகம் மாயூர</strong> - தேவதாரு மலர் மாலையை அணிந்தவனே! (<strong>படாம் </strong>யானையின் நெற்றியில் அணிவிக்கும் அலங்கார மறைப்பு, அல்லது போர்வை) நீலநிறத்தில் போர்வையைப் போர்தியது போன்ற உடலமைப்பைக் கொண்ட மயில் வாகனனே!</p><p align="JUSTIFY"><strong>விமல வ்யாபகா சீல அக விநோத</strong> - பரிசுத்தமானவனே, எங்கும்<br />நிறைந்திருப்பவனே, நற்குண உள்ளத்தவனே, அற்புத மூர்த்தியே,<br /> </p><p align="JUSTIFY"><strong>ககன கூடம் பாடீரம் தவள சோபித ஆளான</strong> - விண்ணுலகத்தைச் சேர்ந்த சந்தனக் (<strong>பாடீரம்</strong>) குழம்பைப் பூசியதும், (<strong>தவள சோபித</strong>) வெண்ணிறத்தால் பிரகாசிக்கும் (<strong>ஆளான)</strong> ஏவல் செய்வதும்</p><p align="JUSTIFY"><strong>கவனம் பூதரம் ஆரூட</strong> - வேகமாகச் செல்வதும், (<strong>பூதரம்</strong>: மலை) மலை போன்றதுமான (ஐராவதம் அல்லது பிணிமுகம் எனப்படும்) யானையில் அமர்ந்த கோலத்தில் விளங்குபவனே! (ரிஷபாரூடர், கருடாரூடர் என்பதைப்போல் இவன் பூதராரூடன்).</p><p align="JUSTIFY"><strong>சத கோடி களப காம வீர்</strong> - (வீர என்பது வீர் என்று வந்திருக்கிறது) <strong>(</strong>களப<strong>)</strong> கலவைச் சாந்து அணிந்த நூறுகோடி (<strong>காமவீர்</strong>) மன்மதன்களுக்கு ஒப்பான வீரனே!</p><p align="JUSTIFY"><strong>வீசு கரம் முக ஆர வேல் வீர</strong> - கதிரொளியை வீசும் முகங்களைக் கொண்டவனே! <strong>ஆர</strong>! கடப்பமாலை அணிந்தவனே! வேல் வீரனே!</p><p align="JUSTIFY"><strong>கருணை மேருவே தேவர் பெருமாளே.</strong> - மேருமலையைப் போல அளவில் மிகப் பெரியதாகிய கருணையாகிய மலையே! தேவர்களுடைய தலைவனே!</p><p align="JUSTIFY">தேவர்களுடைய யமனே! மயில் வாகனனே! என் மனம் மௌனமாகிய ஆலயத்தில் குடியிருந்தது நிலைகுலைந்து நான் கிரியாமார்க்கங்களில் புகாமல், புருவமத்தியில் கவனத்தை நிறுத்தி தியானித்து, அந்த தியானமே உனது பூசையாகச் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ!</p><p align="JUSTIFY">பலன் நாடுவோர், இந்தப் பாடலை ஞான பூசை செய்யும் பாக்கியத்துக்காக ஓதுவர்.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
தினப்பலன்கள் - கும்பம்
வழிகாட்டி உதவுங்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

