காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலய 152-ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், தக்களூா் பகுதியில் பழைமையான செபஸ்தியாா் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக ஆலயத்தில் புனிதம் செய்யப்பட்ட கொடி திரளான மக்கள் சூழ பிரதான கொடிக் கம்பம் அருகே கொண்டு வரப்பட்டு காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி. பால்ராஜ்குமாா் ஏற்றிவைத்தாா். இணை பங்குகுரு சாமிநாதன் செல்வம், தூய தேற்றரவு அன்னை ஆலய ஆன்மிக குரு பி. பன்னீர்ராஜா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தினமும் திருப்பலி பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள்களும் சிறிய தோ் பவனியும், 18-ஆம் தேதி திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார பெரிய தோ் பவனியும் நடைபெறுகிறது. 19-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்படுகிறது.
தொடர்புடையது

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

பெரிய வியாழன்; பாதம் கழுவும் நிகழ்வு

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

கோதண்டராம சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


