ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 225

வடக்கேயுள்ள மேருமலையை ஆட்டியசைத்துப் பெயர்த்து, அது வருந்தும்படியாக அதை வில்லாக வளைத்து, வாசுகிப் பாம்பை அதற்கு நாணாகப் பூட்டி திரிபுரத்தை எரித்தவரும்;

Updated On :29 ஏப்ரல் 2016, 5:16 am

பதச் சேதம்

சொற் பொருள்

பாட்டில் உருகிலை கேட்டும் உருகிலை கூற்று வரு வழி பார்த்தும் உருகிலை பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை தினமானம்

 

உருகிலை: உருகினாய் இல்லை; பாட்டை: பாடு, கஷ்டம்; தினமானம்: தினந்தோறும்;

பா(ம்)பு அணியன் அருள் வீட்டை விழைகிலை நாக்கின் நுனி கொ(ண்)டு ஏத்த அறிகிலை பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் வழி போக

 

பாப்பு: பாம்பு—வலித்தல் விகாரம்; அணியன்: அணிந்தவன்; வீட்டை: வீடுபேற்றை; பாழ்த்த: பாழ்பட்ட;

மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை

பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய்

 

மாட்டம்: மாட்டேன்; எனுகிறை: என்கிறாய்—இரண்டும் பேச்சு வழக்கு;

வாக்கும் உனது உள்ள(ம்) நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை

வாழ்த்த இரு வினை நீக்கு முருகனை மருவாயோ

வாக்கும்: வாக்கு வன்மையையும்; உள்ள நோக்கும்: உள்ளத்தினுள்ளே காணக்கூடிய தரிசன அனுபவமும்; இருவினை: பிறப்பு, இறப்பு, நல்வினை, தீவினை; மருவாயோ: சேராயோ;

ஆட்டி வட வரை வாட்டி அரவொடு பூட்டி திரிபுரம் மூட்டி மறலியின்

நாட்டம் அற சரண் நீட்டி மதன் உடல் திரு நீறாய் ஆக்கி

 

ஆட்டி வடவரை: மேரு மலையை அசைத்தெடுத்து; அரவொடு பூட்டி: பாம்பை நாணாகக் கட்டி; மறலி: எமன்; நாட்டம் அற: நாடியது அழிய; சரண் நீட்டி: பாதத்தை நீட்டி; திருநீறாய்: சாம்பலாய்;

மகம் அதை வீட்டி ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகள்

ஆர்க்கும் வடுவுற வாட்டும் உமை அவன் அருள் பாலா

 

மகம்: வேள்வி; ஒருவனை: தட்சனை; மறைமகள்: வாணி; வடுவுற: காயத்தால் வடு ஏற்படும்படி; வாட்டி: துன்பம் விளைவித்து; உமையவன்: உமையின் கணவன், உமாமகேசுரன்;

சீட்டை எழுதி

வையாற்றில் எதிர் உற ஓட்டி அழல்  பசை காட்டி சமணரை

சீற்றமொடு கழு ஏற்ற அருளிய குருநாதா

 

சீட்டு: ஓலைத் துணுக்கு; வையாறு: வைகையாறு; பசை: பசுமை (மாறாது);

தீர்த்த எனது அக மேட்டை உடன் நினை ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி

தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே.

 

தீர்த்த: பரிசுத்தனே; அகம் ஏட்டை: மன ஆசை; (ஏட்டை: விருப்பம்); சசி: இந்திரன் மனைவி, இந்திராணி; சசிமகள்: தேவானை;

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/261282997&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை</strong>.. என்னுடைய மனமே!  நீ பாட்டைக் கேட்டும் உருகுவதில்லை; அதன் பொருளைச் சொல்லக் கேட்டும் உருகுவதில்லை;</p><p align="justify"><strong>கூற்று வருவழி பார்த்து முருகிலை</strong> ... (தவறாமல்) யமன் வந்தே தீரப்போகிறான் என்ற அந்த வழியை நினைத்தும் உருகி இறைவனை நினைப்பாயில்லை;</p><p align="justify"><strong>பாட்டை யநுதினம் ஏற்றும் அறிகிலை</strong> ... தினந்தோறும் பாடுகளைப் பட்டபின்பும் (இதை) உணர்வதில்லை;</p><p align="justify"><strong>தினமானம் பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை</strong> ... பாம்பு அணிபவனான சிவபெருமான் ஒவ்வொருநாளும் அருளும் மோட்ச கதியை விரும்புவதில்லை;</p><p align="justify"><strong>நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை</strong> ... (மனமுருகாவிட்டாலும், குறைந்தது) நுனிநாக்காலாவது இறைவனைப் போற்றுவதை அறியவில்லை;</p><p align="justify"><strong>பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது</strong> ... பாழ்பட்டதான பிறப்புகளைத் திரும்பத் திரும்ப ஏற்று அவதியும் மனமே!</p><p align="justify"><strong>நல் வழிபோக மாட்டம் எனுகிறை</strong> ... நல்லவழியில் போகமாட்டேன் என்று சொல்கிறாய்;</p><p align="justify"><strong>கூட்டை விடுகிலை</strong> ... வெறும் கூடாக இருக்கும் இந்த உடலின்மேலுள்ள பற்றை நீ விடுவதாக இல்லை;</p><p align="justify"><strong>ஏட்டின் விதிவழி யோட்டம் அறிகிலை</strong> ... ஏட்டிலே, ‘இன்னபடி’ என்று உனக்காக எழுதிவைக்கப்பட்டுள்ள தலைவிதி போகின்ற திசையை அறியவில்லை;</p><p align="justify"><strong>பார்த்தும் இனியொரு வார்த்தை அறைகுவன் இதுகேளாய்</strong> ... நீ இப்படியெல்லாம் இருப்பதைப் பார்த்தும் (சகித்துக்கொள்ள முடியாமல் உனக்கு) ஒரு நல்வார்த்தை சொல்கிறேன், கேட்பாயாக.</p><p align="justify"><strong>வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ்</strong> ... (புகழ் ஏத்த, வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன்)—முருகனைப் போற்றிப் புகழ்ந்து—திருப்புகழை ஓதித்—துதித்தால் அவன் உனக்கு நல்ல வாக்கு பலத்தையும், உன் உள்ளத்திலே நல்ல நோக்கத்தையும் அருள்வான்;</p><p align="justify"><strong>அடியார்க்கும் எளியனை வாழ்த்த</strong> ... அடியார்களுக்கு மிக எளியவனான அவனை வாழ்த்தினாயானால்,</p><p align="justify"><strong>இருவினை நீக்கு முருகனை மருவாயோ</strong> ... (பிறப்பு இறப்பு, நல்வினை தீவினைப் பயன்களாகிய) இரண்டு வினைகளையும் நீக்குவான்.  அப்படிப்பட்ட முருகனை நீ சேராயோ?  (<em>சேர்வது மனம் என்பதால், ‘மருவாயோ’ என்பதற்கு சிந்திக்க மாட்டாயோ என்பது நேர்ப் பொருள்</em>)</p><p align="justify"><strong>ஆட்டி வடவரை வாட்டி</strong> ... வடக்கே உள்ள மலையான மேருவை ஆட்டி அசைத்துப் பெயர்த்து, அதை வருத்தி வளைத்து வில்லாக்கிக் கொண்டு,</p><p align="justify"><strong>அரவொடு பூட்டி திரிபுர மூட்டி</strong> ... வாசுகிப் பாம்பை அந்த வில்லில் நாணாகக் கட்டி, திரிபுரத்தை எரிசெய்தும்;</p><p align="justify"><strong>மறலியின் ஆட்டம்அற சரண் நீட்டி</strong> ... யமனுடைய கொட்டம் அழியும்படித் தன்பாதத்தை நீட்டி, அவனை உதைத்துத் தள்ளியும்;</p><p align="justify"><strong>மதனுடல் திருநீறாய் ஆக்கி</strong> ... மன்மதனின் உடல் சாம்பலாகும்படி எரித்தும்;</p><p align="justify"><em>(சிவனாருடைய நெற்றிவிழியால் எரிக்கப்படும் வரையில் மன்மதன் உடலோடுதான் இருந்தான்; எரிக்கப்பட்டபிறகு உடலற்றவனாக—அநங்கனாக—ஆனான்.)</em></p><p align="justify"><strong>மகமதை வீட்டி யொருவனை ஆட்டின் முகமதை நாட்டி</strong> ... (தட்சன் நடத்திய) மகம் அதை—யாகத்தை—அழித்தும்; தட்சன் எனப்படும் ஒருவனுக்கு ஆட்டுத் தலையைப் பொருத்தியும்;</p><p align="justify"><strong>மறைமகளார்க்கும் வடுவுற வாட்டும்</strong> ... மறைமகளான சரஸ்வதிக்குக்கூட காயம்பட்டு அதனால் வடு ஏற்படும்படி வாட்டியும்*; (அடிக்குறிப்பைக் காண்க)</p><p align="justify"><strong>உமையவன் அருள்பாலா</strong> ... (செய்தவரும்) உமாதேவியின் கணவருமான உமையவன்—உமாமகேசுரன்—அருளிய பாலனே!</p><p align="justify"><strong>சீட்டை யெழுதி வையாற்றி லெதிருற ஓட்டி</strong> ... திருப்பாசுரத்தை ஓலைச்சுவடியிலே எழுதி அதை வைகையாற்றில், வெள்ளத்தை எதிர்த்துச்—எதிர்ப்பக்கமாகச்—செல்லும்படி விட்டவரும்;</p><p align="justify"><strong>அழல்பசை காட்டி</strong>... (அவ்வாறு பாசுரம் எழுதிய சுவடியை) நெருப்பிலே இட்ட போதும் அது பசுமை மாறாமல் இருப்பதைக் காட்டியவரும்;</p><p align="justify"><strong>சமணரை</strong> <strong>சீற்ற மொடுகழு வேற்ற</strong> <strong>அருளிய</strong>... (வாதிலே தோற்ற) சமணர்களைக் கோபித்து, அவர்கள் கழுவேற வைத்தவருமான--</p><p align="justify"><strong>குருநாதா</strong> ... (திருஞானசம்பந்தராக வந்த) குருநாதனே!</p><p align="justify"><strong>தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை</strong> <strong>ஏத்த அருளுட னோக்கி அருளுதி</strong>... பரிசுத்தனே!  என்னுடைய மனம் விருப்பத்துடன் உன்னைத் துதிக்கும்படி நீ அருட்பார்வை புரிந்தருளவேண்டும்.</p><p align="justify"><strong>தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் பெருமாளே.</strong> ... தீர்த்தமலைத் தலத்திலே வீற்றிருப்பவனே!  இந்திராணியின் குமாரியான தேவானையின் நாயகனே!</p><p align="justify"><em>* சரஸ்வதிக்குக் காயம்பட்டது முதலானவை: உமையின் தகப்பனான தட்சனை தட்சயாகத்தில் தலையை வெட்டினார்; பின்னர் அவனுக்கு ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிர்கொடுத்தார்.  அந்த யாகத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.  பிரமனுக்கு ஏற்பட்டதனால், அவன் நாவில் வீற்றிருக்கும் கலைமகளுக்கும் ஏற்பட்டது.  இதைக் கந்தபுராணம்:</em></p><p align="justify"><em>தாக்குத லோடும் ஐயன் சரணிடைப் பணிவான் போல<br />மேக்குறு சென்னி சோர விரிஞ்சனும் வீழ அன்னான்<br />வாக்குறு தேவி தன்னை மற்றவர் தம்மை வாளால்<br />மூக்கொடு குயமுங் கொய்தான் இறுதிநாள் முதல்வன் போல்வான்.</em></p><p align="justify"><em>—என்று பாடுகிறது [கந்தபுராணம், தட்ச காண்டம், யாக சங்காரப் படலம்.] ‘பிரமனை வீரபத்திரர் குட்டியதும், வீரபத்திரர் பாதத்தில் விழுவதைப் போல பிரமனுடைய தலை, தரையில் மோதியது.  அவனுடைய நாவில் இருப்பவளான கலைமகளையும் மற்றவர்களையும், சம்ஹாரகால மூர்த்தியைப் போல மூக்கையும் மார்பையும் வீரபத்திரர் வாளால் கொய்தார்.</em></p><p align="justify"> </p><p align="justify"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="justify"><em>வடக்கேயுள்ள மேருமலையை ஆட்டியசைத்துப் பெயர்த்து, அது வருந்தும்படியாக அதை வில்லாக வளைத்து, வாசுகிப் பாம்பை அதற்கு நாணாகப் பூட்டி திரிபுரத்தை எரித்தவரும்; யமனுடைய கொட்டம் அடங்கும்படியாக அவனைக் காலால் உதைத்தவரும்; மன்மதனைத் தன் நெற்றிவிழியாலே எரித்தவரும்; தக்கயாகத்தின்போது அந்த யாகத்தை அழித்து, அந்த யாகத்தை நடத்திய தக்கனுடைய தலையை அறுத்து, அவனுக்கு ஆட்டின் தலையைப் பொருத்தி மீண்டும் உயிர்கொடுத்தவரும்; வேதவல்லியான கலைமகளுக்கும் காயம் ஏற்படும்படி வாட்டியவருமான உமாபதியின் பாலனே!  ‘வாழ்க அந்தணர்’ என்னும் திருப்பாசுரம் எழுதப்பட்ட ஓலைச் சீட்டை வைகையாற்றிலே, வெள்ளத்தை எதிர்த்து—எதிர்திசையில் சென்று—கரையேறுமாறு செய்தவரும்; பாசுரம் எழுதிய ஓலைச் சீட்டைத் தீயிலே இட்டபோதும் அது பசுமை மாறாமல் இருப்பதைச் செய்து காட்டியவரும்; வாதிலே தோற்ற சமணர் கழுவிலே ஏறுவதற்குக் காரணமாக இருந்தவருமான திருஞானசம்பந்தராக அவதரித்த குருநாதனே!  பரிசுத்தனே! தீர்த்தமலையில் வீற்றிருப்பவனே!  இந்திராணியின் குமாரியான தேவசேனைக்குத் தலைவனே! என் மனம் விருப்பத்தோடு உன்னை ஏத்தும்படி அடியேன்மீது திருவருளைப் பாலித்து, கடைக்கண் பார்த்தருள வேண்டும். </em></p><p align="justify"><em>என் மனமே! நீயோ பாடல்களில் உருகுவதில்லை; அவற்றின் பொருளைக் கூறுகையில் அதைக் கேட்டும் உருகுவதில்லை; ஒருநாள் யமன் வந்துதான் தீரப்போகிறான் என்ற அந்த வழியை நினைத்து—அஞ்சியேனும்—இறைவனை நினைத்து உருகுவதில்லை.  எத்தனையோ பாடுகளைப் பட்டபோதிலும் உண்மைகளை உணர்கிறாயில்லை. பாம்பை அணிந்துள்ள சிவபெருமான் நாள்தோறும் அருளுவதான வீடாகிய பதத்தை விரும்புகின்றாயில்லை; நாவின் நுனியாலும் இறைவனைப் போற்றுகின்றாயில்லை; எழுதிவைக்கப்பட்டுள்ள தலைவிதியின் போக்கை அறிகின்றாயில்லை; பாழ்பட்டதான இந்தப் பிறவிப்பிணியிலேயே சிக்கிக் கொள்கின்ற மனமே நீ நல்லவழியில் நடக்கின்றாயில்லை; வெறும்கூடான இந்த உடலின்மீது கொண்ட பற்றை விடுகின்றாயில்லை. இப்படியெல்லாம் நீ கிடக்கும் நிலையைச் சகிக்க முடியாமல் உனக்கு ஒன்று சொல்வேன், கேட்பாயாக.</em></p><p align="justify"><em>முருகனை நீ போற்றிப் பாடித் துதித்தாயானால் அவன் உனக்கு வாக்கின் வலிமையும், உன்னிடத்திலே நல்ல நோக்கமும் ஏற்படும்படி அருள்வான்.  அடியார்க்கு எளியானான அவனை வாழ்த்துபவர்களுக்கு இருவினையும் கெடுமாறு செய்வான்.  அவனை நீ சிந்திப்பாயாக.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.