கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு சாலை வலம் மேற்கொள்கிறார்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஏப்.15ஆம் தேதி மாலை 4 மணிக்கு - நாகர்கோவில் வருகை தருகிறார். பிறகு மாலை 5 மணிக்கு வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை பிரதமர் மோடி சாலை வலம் மேற்கொள்கிறார்.
சாலை வலத்தை முடித்துக்கொண்டு மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் வழியாக பிரதமர் மோடி தில்லி புறப்பட்டுச் செல்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பல்வேறு மாவட்டங்களில் வாக்குச் சேகரிக்கின்றனர்.
Summary
Prime Minister Modi, who is visiting Kanyakumari district, will conduct a roadshow there.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










