ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 328

திருமயிலைத் தலத்துக்கான பாடலிது.  இறைவனை நேரில் தரிசிக்கும் பேற்றைக் கோருகிறது. 

Updated On :8 ஆகஸ்ட் 2016, 8:50 am

திருமயிலைத் தலத்துக்கான பாடலிது.  இறைவனை நேரில் தரிசிக்கும் பேற்றைக் கோருகிறது. 

சந்த அமைப்பு முறையில் ‘அதல சேட னாராட’ என்ற பாடலை ஒத்தது இது.  குறிலும் நெடிலும் மிகச் சரியான வரிசை முறையில் மாறிமாறி வருகின்ற தாளம்.  அடிக்கு இருபத்தெட்டு எழுத்துகள்.  இதில் 4, 5, 6//12, 14, 15//20, 21, 22//27-28 ஆகிய எழுத்துகள் நெடில்; மற்ற அனைத்தும் குறில்.  27-28ம் எழுத்துகளில் 27ம் எழுத்து நெடிலாகவோ குறிலாகவோ இருக்கலாம்.  ஈற்றுக் குறில், நெடிலாக ஒலிக்கும் என்பதால் இந்த இடத்தில் மாறுதல் ஏற்படலாம்.  (இது: வினைவேர், நெறிபேணா, மடியாதே, வருவாயே, வரைசாடி, மயில்வீரா, வயலோடே, பெருமாளே என்ற அடி ஈற்றுச் சொற்களில் பயிலும் குறில்-நெடில் அமைப்பைப் பார்த்தால் தெரியும்.)

தனன தான தானான தனன தான தானான
            தனன தான தானான                                 தனதான

கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
                  கலக மேசெய் பாழ்மூடர்                     வினைவேடர்
            கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
                  கனவி கார மேபேசி                              நெறிபேணாக்
கொடிய னேது மோராது விரக சால மேமூடு
                  குடிலின் மேவி யேநாளு                     மடியாதே
            குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
                  குவளை வாகும் நேர்காண                 வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
                  பணமு மாட வேநீடு                             வரைசாடிப்
            பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானொடு
                  பதிய தாக வேலேவு                             மயில்வீரா
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
                  வனச வாவி பூவோடை                      வயலோடே
            மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
                  மயிலை மேவி வாழ்தேவர்               பெருமாளே.

</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/277318289&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.