ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 332

‘அடியவர் வேறு, பரம்பொருள் வேறு’ என்றிருக்கும் நிலையை மாற்றி இருவரும் ஒருவராகக் கலந்திருக்கும்

Updated On :13 ஆகஸ்ட் 2016, 6:30 pm

‘அடியவர் வேறு, பரம்பொருள் வேறு’ என்றிருக்கும் நிலையை மாற்றி இருவரும் ஒருவராகக் கலந்திருக்கும் ஐக்கிய நிலையைக் கோரும் பாடல் இது.  சுவாமிமலைத் திருப்புகழ்.  அடிக்கு ஒற்றொழித்து இருபத்தைந்து எழுத்துகள்; 1, 2, 4//8, 9, 11//15, 16, 18 ஆகியவை நெடில்.  மற்ற அனைத்தும் குறில்.  ஒற்றைச் சேர்த்து 7, 14, 21 ஆகிய எழுத்துகள் வல்லொற்று.  இடையினத்தில் ரகர ஒற்று மட்டும் (ர்) அவ்வப்போது பயில்கிறது.  மெல்லின ஒற்று இல்லாத தாளக்கட்டு. ‘நாலாறு நாலு’ ‘நாலாரும் ஆகமம்’ ‘ஷடாதரம்’ என்று ஏகப்பட்ட கணக்குகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.  விவரங்களைப் பொருளைப் பார்க்கும்போது காண்போம்.

தானான தான தத்த தானான தான தத்த

      தானான தான தத்த                 தனதான

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து

         நாலாறு நாலு பற்று              வகையான

      நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி

         நாடோறு நானு ரைத்த           நெறியாக 

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க

         நேராக வாழ்வ தற்கு             னருள்கூர

      நீடார் ஷடாத ரத்தின் மீதேப ராப ரத்தை

         நீகாணெ னாவ னைச்சொ        லருள்வாயே 

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி

         சீராக வேயு ரைத்த               குருநாதா

      தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு

         தீராகு காகு றத்தி                மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த

         காவார்சு வாமி வெற்பின்         முருகோனே

      கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி

         காமாரி வாமி பெற்ற             பெருமாளே.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.