பதச் சேதம் | சொற் பொருள் |
| சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம சத தள பாதா நமோநம அபிராம | சரவண: சரவணமாகிய நாணல் பொய்கையில்; ஜாதா: உதித்தவனே; நமோநம: போற்றி போற்றி; கருணை அதீதா: அளவற்ற கருணை உடையவனே; (அதீதம்: மேம்பட்டது, எட்டாதது; அளவற்றது); சததள பாதா: நூறு இதழ்களைக் கொண்ட தாமரைப் பாதனே; அபிராம: அழகனே; |
| தருண கதீரா நமோநம நிருப அமர் வீரா நமோநம சம(ம்) தள ஊரா நமோநம ஜகதீச | தருண: இளைய; கதீரா: கதிரொளியை உடையவனே; நிருப: வேந்தன், தலைவன்; சமம்: போர்; சமதள: போர்க்களத்துக்கான; ஊரா: போரூரில் வீற்றிருப்பவனே; ஜகதீச: உலகுக்கு ஈசனே; |
| பரம சொரூபா நமோநம சுரர் பதி பூபா நமோநம பரிமள நீபா நமோநம உமை காளி | பரமசொரூபா: பரம ஞானத்தின் வடிவினனே; சுரர்பதி: இந்திரன்; பூபன்: அரசன்; பரிமள: நறுமண; நீபா: நீபத்தை (கடப்ப மாலையை) அணிந்தவனே |
| பகவதி பாலா நமோநம இக பர மூலா நமோநம பவுருஷ சீலா நமோநம அருள் தாராய் | பவுருஷ: பௌருஷ, ஆண்மையின்; சீலா: பரிசுத்தனே; |
| இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற ஏழ் கடல் முறையோ என்று | விரவிய: படர்ந்த, கலந்த; தூள்: புழுதி; ஈடேற: உய்வடைய; |
| இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே | பூதரம்: மலை (இமயம், மேரு என்றும் பொருளுண்டு); நிசாசரர்: இரவில் உலவுபவர், அரக்கர்; இகல்: வலிமை; மாவேக: அதிக வேகத்துடன்; நீடு; நெடிய; அயில்: வேல்; |
| மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும் வசு எனும் ஆகார ஈசனும் அடி பேண | ஆகார(ம்): உருவம் (இன்னொரு பொருள்); ஆயன்: இடையனாக அவதரித்த கண்ணன், திருமால்; இரணிய(ம்): பொன்; வேதன்: பிரமன்; வசு: அக்கினி; |
| மயில் உறை வாழ்வே விநாயக மலை உறை வேலா மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே. | மயிலுறை: மயிலில் வீற்றுள்ள; மகீதர: மஹி: பூமி, மலை; மகீதரன்: மலைக்கு உரியவர்களான; வனசரர்: வனத்தில் திரிபவர், வேடர். |
</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/245384417&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>சரவண ஜாதா நமோநம</strong> ... நாணல் பொய்கையிலே உதித்தவனே போற்றி போற்றி!</p><p align="JUSTIFY"><strong>கருணை அதீதா நமோநம</strong> ... அளவற்ற கருணை உடையவனே போற்றி போற்றி!</p><p align="JUSTIFY"><strong>சததள பாதா நமோநம</strong> ... நூறு இதழ்களைக் கொண்ட தாமரையைப் போன்ற பாதங்களை உடையவனே போற்றி போற்றி!</p><p align="JUSTIFY"><strong>அபிராம</strong> ... பேரழகனே!</p><p align="JUSTIFY"><strong>தருண கதீரா நமோநம</strong> ... இளைய ஜோதி சொரூபனே போற்றி போற்றி!</p><p align="JUSTIFY"><strong>நிருப அமர் வீரா நமோநம</strong> ... (தேவர்களுடைய) தலைமைச் சேனாதிபதியாக விளங்கும் வீரனே போற்றி போற்றி</p><p align="JUSTIFY"><strong>சமதள வூரா நமோநம</strong> ... சமர்தள—போர்க்களத்துக்கு உரிய—(சேனைகள் நிறைந்த) திருப்போரூரில் கொலுவீற்றிருப்பவனே போற்றி போற்றி</p><p align="JUSTIFY"><strong>ஜகதீச</strong> ... எல்லா உலகங்களுக்கும் ஈசனே!</p><p align="JUSTIFY"><strong>பரம சொரூபா நமோநம</strong> ... முழுமையான ஞானத்தின் வடிவமே போற்றி போற்றி!</p><p align="JUSTIFY"><strong>சுரர்பதி பூபா நமோநம</strong> ... தேவர் தலைவனான இந்திரனுக்கும் அரசனே போற்றி போற்றி!</p><p align="JUSTIFY"><strong>பரிமள நீபா நமோநம</strong> ... நறுமணம் கமழும் கடப்ப மாலையை அணிந்தவனே போற்றி போற்றி!</p><p align="JUSTIFY"><strong>உமைகாளி பகவதி பாலா நமோநம</strong> ... உமையென்றும் காளியென்றும் பகவதியென்றும் ஓதப்படும் பார்வதி தேவியின் மகனே போற்றி போற்றி!</p><p align="JUSTIFY"><strong>இகபர மூலா நமோநம</strong> ... இம்மை மறுமைகளுக்கு மூல காரணனே போற்றி போற்றி!</p><p align="JUSTIFY"><strong>பவுருஷ சீலா நமோநம</strong> ... ஆண்மையின் குணநலன்கள் நிறைந்தவனே போற்றி போற்றி!</p><p align="JUSTIFY"><strong>அருள்தாராய்</strong> ... உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.<br /><br /><strong>இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூளேற</strong> ... சூரிய மண்டலத்திலும் ஆகாயத்திலும் பூமியிலும் (போரின்போது எழும்) புழுதி படர்ந்து, மேலே ஏற;</p><p align="JUSTIFY"><strong>வானவர் எவர்களும் ஈடேற</strong> ... தேவர்கள் எல்லோரும் உய்வடையும்படியும்;</p><p align="JUSTIFY"><strong>ஏழ்கடல் முறையோவென்று இடர்பட</strong> ... ஏழு கடல்களும் ‘இது முறையோ’ என்று கதறித் துன்பம் அடையுமாறும்;</p><p align="JUSTIFY"><strong>மாமேரு பூதர மிடிபடவேதான்</strong> ... மிகப்பெரிய மேரு மலையானது இடிபட்டுத் தூளாகும்படியும்;</p><p align="JUSTIFY"><strong>நிசாசரர் இகல்கெட</strong> ... இரவில் திரிபவர்களான அசுரர்களுடைய வலிமை அழியும்படியும்;</p><p align="JUSTIFY"><strong>மாவேக நீ(டு) அயில் விடுவோனே</strong> ... வெகுவேகம் கொண்டதும், நெடியதுமான வேலை வீசியவனே!</p><p align="JUSTIFY"><strong>மரகத ஆகார ஆயனும்</strong> ... மரகதப் பச்சை வடிவினனும், இடையனாக அவதரித்தவனான திருமாலும்,</p><p align="JUSTIFY"><strong>இரணிய ஆகார வேதனும்</strong> ... பொன்னிற வடிவத்தைக் கொண்ட பிரமனும்,</p><p align="JUSTIFY"><strong>வசுவெனும் ஆகார ஈசனும் அடிபேண</strong> ... அக்கினியின் நிறத்தில் வடிவம் கொண்ட பரமசிவனும் உன் திருவடியைப் போற்றும்</p><p align="JUSTIFY"><strong>மயிலுறை வாழ்வே</strong> ... மயில் வாகனத்தில் வீற்றிருக்கும் இறைவனே!</p><p align="JUSTIFY"><strong>விநாயக மலையுறை வேலா</strong> ... விநாயக மலை எனப்படும் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளியுள்ள வேலனே!</p><p align="JUSTIFY"><strong>மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே.</strong> ... மலைகளில் வாழும் வேடர்களுக்கு ஆதாரமாக விளங்கும் பெருமாளே!</p><p align="JUSTIFY"><strong><em>சுருக்க உரை </em></strong></p><p align="JUSTIFY"><em>போரிலே எழுந்த புழுதியானது சூரிய மண்டலத்துக்கும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் ஏறிக் கலந்து படரும்படியும்; தேவர்கள் உய்வடையும்படியும்; ஏழு கடலும் (வேல் வருகின்ற வேகத்தால் ஏற்படும் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல்) ‘இது முறையோ’ என்று கதறும்படியும்; மேருமலை பொடிபட்டுத் தூளாகும்படியும் வேகம் நிறைந்த வேலைச் செலுத்தியவனே! திருமாலும் பிரமனும் ஈசனும் உன்னுடைய திருவடியைப் போற்றும்படி மயில்மீதில் அமர்ந்து விநாயக மலையான பிள்ளையார்பட்டியில் வீற்றிருப்பவனே! மலைகளில் வாழும் வேடர்களுக்கு ஆதாரமாக விளங்குபவனே!</em></p><p align="JUSTIFY"><em>சரவணப் பொய்கையில் உதித்தவனே; அளவற்ற கருணையுள்ளவனே; நூறு இதழ்களை உடைய தாமரை போன்ற பாதத்தை உடையவனே; பேரழகனே; இளையதான கதிர்களை விடுக்கும் ஜோதி வடிவினனே; தேவசேனாதிபதியே; போருக்கான தளமான போரூரில் வீற்றிருப்பவனே; எல்லா உலகங்களுக்கும் ஈசனே; பரமஞானத்தின் திரண்ட வடிவமே; இந்திரனுக்குத் தலைவனே; நறுமணம் கமழும் கடப்ப மாலையை அணிந்தவனே; உமையென்றும் காளியென்றும் பகவதியென்றும் நாமங்களை உடைய பார்வதியம்மையின் மகனே; இம்மை மறுமைகளுக்கு மூல காரணனனே; ஆண்மையில் நலன்களிலெல்லாம் மேம்பட்டவனே, உன்னைப் போற்றி போற்றி என்று துதிக்கிறேன். உன்னுடைய அருளைத் தந்தருள வேண்டும்.</em></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

