ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 157

தாமரையை ஒத்த கைகளும்; ஒளிபொருந்திய பவளத்தை ஒத்த இதழ்களும்; சங்கை ஒத்த கழுத்தும்; அம்பை ஒத்த விழியும்;

Updated On :20 பிப்ரவரி 2016, 10:57 am

பதச் சேதம்

சொற் பொருள்

கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு மின்: ஒளி பொருந்திய; அதரம்: இதழ்கள்; வளை: சங்கு; களம்: கழுத்து; பகழி: அம்பு;
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின மாது(ஓடு) குரும்பை: முற்றாத இளநீர்; குருகு: இளமை; பிடி: பெண்யானை; எயின மாதோடு: குறப்பெண்ணோடு;
அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நிய(ம)ம் உற மயில் மீதே அரங்க: உராய—அணைக்க; நக: நாக—மலை; குதலை: மழலை; அலங்க: அசைவுபெற; நியமம் உற: முறைப்பட, நிச்சயமாக;
அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே பவவினை: பிறவியாகிய நோய்; அந்தகன்: யமன்;
தரங்கம் முதிய மகரம் பொருத திரை சல(ந்)தி நதி குமரன் என வான தரங்கம்: அலை; முதிய மகரம்: முதிர்ந்த, பெரிய மீன்கள்; சலந்தி: சலதி என்பதன் விகாரம்; சலதி: கடல்; சலதிநதி: கடல்போன்ற கங்கை;
தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர் ஆழி ஆழி: கடல்;
இரங்கு தொலை திரு அரங்கர் மருக பனிரண்டு புய மலை கிழவோனே இரங்கு: கருணையோடு (அறிதுயிலில்) இருக்கும்; திருவரங்கர்: ஸ்ரீரங்கநாதரின்; மலை கிழவோனே: மலைகளுக்கு உரியவனே;
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே. இலங்கு தர தமிழ்: தமிழ் இலங்குமாறு, விளங்கித் தோன்றுமாறு; வரு: திருஞானசம்பந்தராக அவதரித்த;

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/247991533&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"><strong>கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி</strong> ... தாமரையை ஒத்த கைகளும்; ஒளிபொருந்திய பவளத்தை ஒத்த இதழ்களும்; சங்கை ஒத்த கழுத்தும்; அம்பை ஒத்த விழியும்;</p><p align="JUSTIFY"><strong>மொழி பாகு கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை</strong> ... சர்க்கரைப் பாகையும், கரும்பையும் அமுதையும் ஒத்த பேச்சையும்; தென்னங் குரும்பையை (முற்றாத இளநீரை) ஒத்த மார்பகத்தையும்; பெண்யானையை ஒத்த நடையையும் கொண்ட—</p><p align="JUSTIFY">(<em>மதங்கொண்ட பெண்யானையின் நடை என்ற மதர்த்த நடை ‘மதகஜ காமினி என்று கொண்டாடப்படும் ஒன்று</em>.)</p><p align="JUSTIFY"><strong>எயின் மாதோடு அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க</strong> ... வேடர் குலப்பெண்ணான வள்ளியோடு நீ அணைத்தபடி வருவதால் அம்மையின் மலையை ஒத்த கனமான மார்பகங்கள் அழுந்தப்பெறும்படியும், அம்மையின் மழலைமொழியின் ஒலியானது எல்லா இடங்களிலும் அசைந்து ஒலிக்கவும்;</p><p align="JUSTIFY"><strong>நிய(ம)ம் உற மயில் மீதே அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே</strong> ... நீ முறைப்படி மயிலின் மேலே அமர்ந்து பிறப்பாகிய வினையை ஒழிப்பதற்காக, என்னைப் பற்ற வருகின்றவனான கொடிய யமன் என் அருகில் வராமல் இருப்பதற்காக என்னிடத்திலே வர வேண்டும்.</p><p align="JUSTIFY"><strong>தரங்கம் முதிய மகரம் பொருத திரை சல(ந்)தி நதி குமரன் என</strong> ... அலைகள் நிறைந்ததும்; பெரிய மகரமீன்கள் சண்டையிட்டு விளையாடுவதுமான கடல்போன்ற கங்கை நதிக்குக்குக் குமாரனாக —காங்கேயனாக —</p><p align="JUSTIFY">(<em>கங்கையின் புத்திரன் என்பதால் காங்கேயன் என்று அழைக்கப்படுபவர்கள் இருவர்.  ஒருவர் பீஷ்மர்; மற்றவர் முருகன்</em>)</p><p align="JUSTIFY"><strong>வான தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர்</strong> ... வானத்திலுள்ளோர்—தேவர்கள்—போற்றவும்; வேதம் ஒலிக்கப்பெற்று வாழ்த்தவும்; கிண்கிணிச் சதங்கைகளை அணிந்துள்ள உன் சிற்றடிகளைத் தொழுபவரான—</p><p align="JUSTIFY"><strong>ஆழி இரங்கு தொ(ல்)லை திரு அரங்கர் மருக</strong> ... பாற்கடலின் நடுவில் கருணையோடு அறிதுயிலில் விளங்கும் தொன்மையானவரான ஸ்ரீரங்கத்துப் பெருமாளுடைய மருமகனே!</p><p align="JUSTIFY"><strong>பனிரண்டு புய மலை கிழவோனே</strong> ... பன்னிரண்டு தோள் மலைகளை உடைய; குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருக்கும் இடம் என்று மலைகளுக்கு உரியவனாகத் திகழ்பவனே!</p><p align="JUSTIFY"><strong>இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே.</strong> ... தமிழ் மொழியானது பொலிவுற்று இலங்கும்படியாக திருஞானசம்பந்தராக அவதரித்து வந்தவனே!  திருஇலஞ்சியில் வீற்றிருக்கும் பெருமாளே!</p><p align="JUSTIFY"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="JUSTIFY"><em>தேவர்கள் போற்றவும்; வேதகோஷங்கள் முழங்கி வாழ்த்தவும்; கிண்கிணிச் சதங்கைகளை அணிந்துள்ள உன் சிறிய பாதங்களை வணங்கி மகிழ்பவரான; கருணையோடு பாற்கடலில் பள்ளிகொண்டவரும் ஸ்ரீரங்கநாதருமான திருமால் மருகனே!  பன்னிரண்டு தோள்மலைகளை உடையவனே!  குன்றங்கள் எல்லாவற்றிலும் நின்றாடும் மூர்த்தியே!  தமிழ்மொழி பொலிவுபெறுமாறு திருஞான சம்பந்தராக அவதரித்தவனே!  திரு இலஞ்சியில் வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p align="JUSTIFY"><em>தாமரையை ஒத்த கைகளையும்; ஒளிபொருந்திய பவளத்தை ஒத்த இதழ்களையும்; சங்கை ஒத்த கழுத்தையும்; அம்பை ஒத்த விழியையும்; சர்க்கரைப் பாகையும், கரும்பையும் அமுதையும் ஒத்த பேச்சையும்; முற்றாத இளநீனை ஒத்த மார்பகத்தையும்; மதங்கொண்ட பெண்யானையை ஒத்த நடையையும் கொண்டவளான வேடர் மகளான வள்ளியம்மையை நீ அணைத்தபடி வருவதால் அவளுடைய மார்பகம் அழுந்தப்பெறும்படியும்; அம்மையின் மழலையொலி எல்லா இடங்களிலும் ஒலிக்கும்படியும்; நீ முறைப்படி மயிலின் மீது அமர்ந்தவண்ணமாக, என்னைப் பற்றவரும் யமனை என்னருகில் வரவிடாதபடி செய்து, என் பிறவித் துன்பத்தை அறுப்பதற்காக என்னிடத்திலே வந்தருள வேண்டும்.</em></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.