பதச் சேதம் | சொற் பொருள் |
புமி அதனில் ப்ரபுவான
| புமி: பூமி, குறுக்கல் விகாரம்; ப்ரபு: பிரபு—அரசன்; |
புகலியில் வித்தகர் போல
| புகலி: சீகாழி; வித்தகர்: வித்தகரான ஞான சம்பந்தர்; |
அமிர்த கவித் தொடை பாட
| கவித் தொடை: கவிமாலை; |
அடிமை தனக்கு அருள்வாயே
|
|
சமரில் எதிர்த்த சுர் மாள
| சமரில்: போரில்; சுர்: சூர், சூரன் குறுக்கல் விகாரம்; |
தனி அயில் விட்டு அருள்வோனே
| தனி: ஒப்பற்ற; அயில்: கூர்மை, அதனால் கூரிய வேல்; |
நமசிவயப் பொருளானே
| பொருளோனே: மூலப் பொருளே |
ரசத கிரி பெருமாளே.
| ரசத(ம்): வெள்ளி; ரசதகிரி: வெள்ளி அம் கிரி, கயிலாயம்; |
</p><p align="justify"><strong><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/271213551&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></strong></p><p align="justify"><strong>புமிய தனிற் ப்ரபுவான</strong> ... இந்தப் புவிமண்டலத்தின் அரசராகத்—தனிப்பெரும் தலைவராக;</p><p align="justify"><strong>புகலியில் வித்தகர்போல</strong> ... சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தரைப் போல,</p><p align="justify"><strong>அமிர்தகவித் தொடைபாட</strong> ... (மரணமில்லாப் பெருவாழ்வைத் தரவல்ல) அமிர்தம் ததும்பும் வாக்கால் கவிமாலைகளைப் பாடும் திறனை,</p><p align="justify"><strong>அடிமைதனக்கு அருள்வாயே</strong> ... அடிமையாகிய அடியேனுக்கும் அருள வேண்டும்.</p><p align="justify"><strong>சமரிலெதிர்த்த சுர் மாள</strong> ... போரில் எதிர்த்து நின்ற சூரன் இறந்துபடும்படியாக,<strong /></p><p align="justify"><strong>தனியயில்விட்டு அருள்வோனே</strong> ... ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவியவனே! <strong /></p><p align="justify"><strong>நமசிவயப் பொருளானே</strong> ... நமசிவய என்ற ஐந்தெழுத்தின் மூலப் பொருளாக விளங்குபவனே! <strong /></p><p align="justify"><strong>ரசதகிரிப் பெருமாளே.</strong> ... வெள்ளியங்கிரியான கயிலைமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!</p><p align="justify"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="justify"><em>போரில் எதிர்த்துவந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்கள் மாளும்படியாக ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தியவனே! ‘நமசிவய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலப் பொருளே! வெள்ளியங்கிரியான கயிலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p align="justify"><em>இந்த பூமண்டலத்துக்குத் தலைவனாக சீகாழித் தலத்தில் தோன்றிய திருஞான சம்பந்தரைப் போல அமுதமயமான சொற்களால் கவிமாலை தொடுப்பதற்கான ஆற்றலை அடிமையாகிய எனக்கும் அருளவேண்டும்.</em></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

