பதச் சேதம் | சொற் பொருள் |
சேம கோமள பாத தாமரை சேர்தற்கு ஓதும் அனந்த வேத
| சேமம்: பாதுகாவல்; கோமள: அழகிய; |
அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே
| அதீத்தே: கடந்த நிலையில்; அவிரோதத்தே: விரோதமற்ற நிலையில்; குணசீலத்தே: நற்குணங்களும் சீலங்களும்; |
காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா
| உலோப: கஞ்சத்தனம்; பூதவிகாரம்: ஐம்பூதங்களால் ஏற்படும் மாறுபாடுகள்; |
காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என் கொலோ தான்
| காயம்: உடல்; பசு பாசம்: உலக இச்சைகள்; ஏயும்: இயையும், இசையும்; |
நேமி சூரொடு மேரு தூள் எழ நீள காள புயங்க கால
| நேமி: கடல்; சூர்: சூரபத்மன்; காள: நஞ்சு; புயங்க கால: பாம்பை காலிலே பற்றியுள்ள; |
நீல க்ரீப கலாப தேர் விடு நீப சேவக செந்தில் வாழ்வே
| க்ரீப(ம்): கழுத்து; கலாபம்: தோகை; நீபச் சேவக: கடப்ப மாலையை அணிந்த வீரா; |
ஓமத் தீ வழுவார்கட்கு ஊர் சிவ லோகத்தே தரு மங்கை பாலா
| ஓமத்தீ: வேள்வித் தீ; வழுவார்கள்: தவறாது வளர்ப்பவர்கள்; ஊர்: ஊரை, இருப்பிடத்தை; மங்கை: உமை; |
யோகத்து ஆறு உபதேச தேசிக ஊமை தேவர்கள் தம்பிரானே.
| ஆறு: வழி; தேசிக: குருமணியே; |
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/268437519&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>சேமக் கோமள பாதத் தாமரை</strong> ... பாதுகாவலாய் விளங்குபவையும், அழகானவையுமான உன்னுடை திருவடித் தாமரைகளை,</p><p align="justify"><strong>சேர்தற்கு ஓதும் அநந்தவேத அதீதத்தே</strong> ... சேர்வதற்கான வழிகளைச் சொல்கின்ற எண்ணற்ற வேதங்களைக் கடந்த நிலையின் மேலும்;</p><p align="justify"><strong>அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்புறாதே</strong> ... விரோதமற்ற சாந்தமான நிலையின் மேலும்; நற்குண நன்னெறிகளின் மேலும் அன்பைச் செலுத்தாமல்;</p><p align="justify"><strong>காம க்ரோத உலோபப் பூதவிகாரத்தே</strong> <strong>அழிகின்ற மாயா காயத்தே</strong>... காமம், கோபம், கருமித்தனம் ஆகிய இவற்றாலும்; ஐம்பூதங்களின் மாறுபாடுகளால் அழியும் மாயை நிறைந்த இந்த உடலின் மேலும்;</p><p align="justify"><strong>பசு பாசத்தே</strong> ... உலகப் பற்றுகளின் மேலும்,</p><p align="justify"><strong>சிலர் காமுற்றேயும் அது என்கொலோதான்</strong> ... சிலர் மோகங்கொண்டு நிற்கும் நிலை எதனால் நேர்கிறது?</p><p align="justify"><strong>நேமிச் சூரொடு மேருத் தூளெழ</strong> ... கடலும் சூரபத்மனும் கலங்கும்படியும்; மேருமலை தூளாகும்படியும்;</p><p align="justify"><strong>நீளக் காள புயங்க கால</strong> ... விஷமுள்ள பெரிய பாம்பைக் காலிலே பற்றிக் கொண்டதும்;</p><p align="justify"><strong>நீலக்ரீப கலாபத் தேர்விடு</strong> ... நீலமான கழுததை உடையதும்; தோகையைக் கொண்டதுமான மயிலைத் தேர்போல நடத்துகின்ற,</p><p align="justify"><strong>நீபச் சேவக செந்தில்வாழ்வே</strong> ... கடப்ப மாலை அணிந்த வீரனே! திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே! <strong /></p><p align="justify"><strong>ஓமத்தீ வழுவார்கட்கு ஊர்சிவ லோகத்தே</strong> <strong>தரு மங்கைபாலா</strong>... என்றும் தவறாமல் வேள்வித் தீயை வளர்ப்பவர்களுக்கு சிவலோகத்திலே இருப்பிடத்தைத் தருகின்ற உமாதேவியாரின் பாலனே!</p><p align="justify"><strong>யோகத்து ஆறு உபதேசத் தேசிக</strong> ... யோகவழிகளை உபதேசிக்கும் குருமூர்த்தியே, <strong /></p><p align="justify"><strong>ஊமைத் தேவர்கள் தம்பிரானே.</strong> ... (வல்லவர்களாக இருந்தாலும் எல்லாம் வல்ல உன்முன்னே) வாய்பேச முடியாமல் நிற்கும் தன்மையையுடைய தேவர்களுடைய தலைவனே.</p><p align="justify"><em>சுருக்க உரை</em></p><p align="justify"><em>கடலும் சூரனும் கலங்கவும்; மேருமலை தூளாகவும் (சிறகுவீசிப் பறப்பதும்); விஷமுள்ள நெடிய பாம்பைக் காலிலே பற்றியதும்; நீலக் கழுத்தையும் தோகையையும் உடையதான மயிலைத் தேராக நடத்திச் செல்பவனே! கடப்ப மாலையை அணிந்த வீரனே! தவறாமல் வேள்வித் தீயை வளர்ப்பவர்களுக்குச் சிவலோகத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தித் தரும் உமையம்மையின் பாலனே! யோக வழிகளை உபதேசித்து அருளும் குருமூர்த்தியே!</em></p><p align="justify"><em>உன்னுடைய திருப்பாதங்களை அடைவதற்கான வழிகளைச் சொல்கின்ற கணக்கற்ற வேதங்களைக் கடந்த நிலை; பகையற்ற நற்குண நற்சீலங்கள் என்று அன்பை வைக்க இத்தனை இடங்கள் இருக்கும்போது, இவற்றை விட்டு,</em></p><p align="justify"><em>காமத்தின்மேலும்; கோபத்தின்மேலும்; கருமித்தனத்தின்மேலும்; பஞ்சபூதங்களின் மாறுபாடுகளால் ஏற்பட்டுச் சிதைகின்ற இந்த உடலின்மேலும் சிலர் அன்பைவைத்து மயங்கித் திரிகிறார்களே, இது ஏன்? (அவர்களை இந்த நிலையிலிருந்து விடுவித்தருள வேண்டும்.)</em></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

