/

பகுதி - 283

வானுலகும் அடியேனும் தழைத்து ஓங்கவும்; பிரமனும் மாலும் பிழைக்கவும் கடலில் எழுந்த ஆலகால விஷத்தைப் பருகுவதற்காக வாரியெடுக்கும் கரத்தை உடையவரும்;

Updated On :21 ஜூன் 2016, 9:54 am

பதச் சேதம்

சொற் பொருள்

தேன் உந்து(ம்) முக்கனிகள் பால் செம்கருப்பு இளநிர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற

 

தேன்உந்தும்: தேன் பெருக்கும்; இளநிர்: இளநீர் (குறுக்கல் விகாரம்); சீர்: (சுவையின்) சிறப்பை; பழித்த: பழிக்கும் (விஞ்சும் என்பது பெறப்படும் பொருள்);

தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி

 

பொடித்து விழ: பொடிபட்டு விழ; சிவச்சொரூபம் என்பது சிவசொருபம் என்றானது—முறையே மெலித்தல், குறுக்கல் விகாரங்கள்; எனதேறி: எனத்தேறி, மெலித்தல் விகாரம்;

நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே

 

ஊன்: மாமிசம் பொதிந்ததான உடல்; வெளி: பரவெளி; வெளிநாத: பரவெளியிலே உண்டாகும் நாதம்; ஒளிமீதே: ஒளியிடத்திலே;

ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே 

 

 

வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன் மாலும் பிழைக்க அலை விடம் மாள

 

வானம்: வானலோகம்; அயன்: பிரமன்; மால்: திருமால்; அலை விடம்: கடலிலே எழுந்த ஆலகால விஷம்; மாள: அதன் சக்தி அழிய;

வாரும் கரத்தன்  எமை ஆளும் தகப்பன் மழு மானின் கரத்தன் அருள் முருகோனே

 

வாரும்: வாரி எடுக்கின்ற; மழு: கோடரி;

தானந் தனத்தனனா வண்டு சுற்றி மதுதான் உண் கடப்ப மலர் அணி மார்பா

 

 

தானம் குறித்து எமை ஆளும் திருக்கயிலைமலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே.

 

தானம்: ஸ்தானம், நிலைமை;

</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/270149707&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p><strong>தேன் உந்து முக்கனிகள்</strong> <strong>பால்செங் கருப்பிளனிர்</strong> ... தேன் சிந்துகின்ற மா, பலா வாழை ஆகிய முக்கனிகளும் பாலும் செங்கரும்பும் இளநீரும் ஆகிய இவற்றின்,</p><p><strong>சீரும்</strong> <strong>பழித்த</strong> <strong>சிவம்</strong>... (சுவைச்) சிறப்பைத் தாழ்த்துவதான (விஞ்சுவதான) சிவத்தின்,</p><p><strong>அருள் ஊற</strong> ... அருள் ஊற்றெடுத்துப் பொங்கவும்;</p><p><strong>தீதும் பிடித்தவினை யேதும்</strong> <strong>பொடித்துவிழ</strong>.... (அடியேனுடைய) தீவினையும் தொடர்கின்ற மற்ற வினைகள் எதுவாயினும் அவை ஒன்றாகப் தூள்பட்டு ஒழியவும்;</p><p><strong>சீவன் சிவச்சொருபம்</strong> <strong>என தேறி</strong> ...... இந்த ஜீவனே சிவடிவமாக விளங்குகிறது என்பதைத் தெளிந்துகொண்டு,</p><p><strong>நானென்ப தற்று</strong> <strong>உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று</strong> ... நான் என்ற உணர்வின் மீதும், உயிரின் மீதும் உடலின் மீதும் வைத்துள்ள பற்றுகள் முற்றிலும் இல்லாமல் போய்,</p><p><strong>வெளிநாதம் பரப்பிரம</strong> <strong>ஒளிமீதே</strong> ... (சித் ஆகாசம்=சிதாகாசம் எனப்படும்) பரவெளியில், உன்னுடைய அருளாகிற நாதப் பிரம்மம் என்னும்</p><p><strong>ஞானம் சுரப்ப</strong> <strong>மகிழ் ஆனந்த சித்தியொடு</strong> ... சிவஞானம் ஊற்றெடுக்கவும்; மகிழ்ச்சி பெருகும் சிவானந்த மோட்சத்தில்,</p><p><strong>எநாளும் களிக்க</strong> <strong>பதம் அருள்வாயே</strong>... அடியேன் என்றென்றும் மகிழ்ந்திருக்குமாறு உன்னுடைய திருவடியைத் தந்தருள வேண்டும்.</p><p><strong>வானம் தழைக்க</strong> <strong>அடியேனும் செழிக்க</strong> <strong>அயன் மாலும் பிழைக்க</strong> ... தேவலோகம்—தேவர்கள்—தழைத்து ஓங்குவதற்காகவும்; அடியேனும் சிவானந்த நலத்தில் செழிப்பதற்காகவும்; பிரமனும் திருமாலும் பிழைப்பதற்காகவும்,</p><p><strong>அலை விட(ம்) மாள</strong> ... பாற்கடலிலே தோன்றிய ஆலகால விஷத்தின் வலிமை அழியும்படி,</p><p><strong>வாருங் கரத்தன்</strong> <strong>எமை யாளும் தகப்பன்</strong> ... (அதைப் பருகுவதற்காக) வாரி எடுக்கும் கரத்தை உடையவனும்; எம்மை ஆண்டுகொள்ளும் தகப்பனும்;</p><p><strong>மழு மானின் கரத்தன்</strong> <strong>அருள் முருகோனே</strong> ... கோடரி (பரசு), மான் ஆகியவற்றை ஏந்திய கரத்தை உடையவனுமான சிவபிரான் அருளிய முருகனே!</p><p><strong>தானந் தனத்ததனனா</strong> <strong>வண்டு சுற்றி</strong> ... தானம் தனத்தனனா என்ற ரீங்காரத்துடன் வட்டமிடும் வண்டு,</p><p><strong>மது தானுண் கடப்பமலர்</strong> <strong>அணிமார்பா</strong> ... தேனைப் பருகுகின்ற கடப்ப மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணியும் மார்பனே!</p><p><strong>தானங் குறித்து</strong> ... எம்முடைய நிலைமையைப் பார்த்து,</p><p><strong>எமை யாளும்</strong> <strong> திருக்கயிலை சாலும்</strong> ... எம்மை ஆட்கொள்வதற்காகவே திருக்கயிலாய மலையின்மேல் எழுந்தருளியிருப்பவனே!</p><p><strong>குறத்திமகிழ் பெருமாளே.</strong> ... வள்ளியம்மை விரும்பும் பெருமாளே!</p><p><em> </em></p><p><em>சுருக்க உரை</em></p><p><em>வானுலகும் அடியேனும் தழைத்து ஓங்கவும்; பிரமனும் மாலும் பிழைக்கவும் கடலில் எழுந்த ஆலகால விஷத்தைப் பருகுவதற்காக வாரியெடுக்கும் கரத்தை உடையவரும்; மானையும் கோடரியையும் ஏந்திய கரத்தருமான சிவபிரான் அருளிய பாலனே!  தேனைப் பருகுவதற்காக வண்டுகள் ரீங்காரத்துடன் சுற்றி மொய்க்கும் கடப்ப மாலையை அணிந்தவனே!  எம்முடைய நிலைமையைக் கண்டு (இரங்கி) எமை ஆண்டுகொள்வதற்காகக் கயிலையில் எழுந்தருளியிருப்பவனே!  வள்ளியம்மையின் மனத்தை மகிழ்விக்கும் பெருமாளே! </em></p><p><em>தேனூறும் முக்கனிகள், பால், செங்கரும்பு இவை எல்லாவற்றின் சுவையையும் விஞ்சும் சுவையான சிவத்தின் அருள் பெருக; அதனாலே எம்முடைய தீவினைகளும் எமைத் தொடரும் மற்ற எல்லா வினைகளும் பொடிபட்டு அழியவும்; இந்த சீவன் (ஜீவாத்மா) சிவஸ்வரூபமே (பரமாத்மாவின் வடிவமே) என்பதை உணர்ந்து; நான் என்ற உணர்வின்மீதும், இந்த உயிர்மீதும் உடல்மீதும் உள்ளதான பற்று அழிபட்டு, பரஒளியில் ஞானம் பெருகி, மகிழ்ச்சி தரும் சித்தியை அடியேன் அடைந்து என்றென்றும் மகிழ்ந்திருக்குமாறு உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.