ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 191

முருகா!  பசுமைப் பொலிவுள்ள கடற்கரையில் இருக்கும் குன்று முழுவதிலும் சங்கும் வலம்புரியும் நிரம்பிக் கிடப்பதான அழகிய திருச்செந்தூரில்

Updated On :24 மார்ச் 2016, 7:07 am

பதச் சேதம்

சொற் பொருள்

துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற  நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளிஅற: முற்றிலும்; ஒளி: (உடலின்) ஒளி, தேசு, தேஜஸ்;
துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே துஞ்சும்: மங்கி; பெண் சஞ்சலம்: பெண்களிடத்திலே மயங்கி;
இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி இன்பம் தந்து: இன்பத்தைத் தந்து (தரவல்ல); உம்பர்: தேவர்; பத கஞ்சம்: திருவடித் தாமரை;
என்றென்றும் தொண்டு செ(ய்)யும்படி அருள்வாயே  
நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி  நின் பங்கு: உன் அருகில்; ஒன்றும்: பொருந்தி நிற்கும்; குறமின்: குறக்குல மின்னல்—வள்ளி; சரணம் கண்டு: திருவடிகளைக் கண்டு;
நின்று அன்பின்தன் படி கும்பிடும் இளையோனே அன்பின்தன் படி: அன்பின் முறைப்படி;
பைம் பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி பைம்பொன்: பசுமைப் பொலிவு; சிந்து: கடல்; சிந்தின் துறை: கடற்கரை;
பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே. பம்பும்: நெருங்கிக் கிடக்கும், நிறைந்திருக்கும்; தென்: அழகிய;

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/254767256&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"><strong>துன்பங்கொண்டு அங்கம் மெலிந்து</strong> ... (பெண்களிடம் ஏற்படும் மயக்கத்தாலே) மனத்தில் துன்பம் கொண்டு, உடல் இளைத்து,<br /><strong><br />அற நொந்து</strong> ... முற்றிலும் மனம் நொந்துபோய்,<br /><strong><br />அன்பும் பண்பும் மறந்து</strong> ... அன்பு, நல்ல குணங்கள் எல்லாவற்றையும் மறந்துபோய்,<br /><br /><strong>ஒளி துஞ்சும்</strong> ... உடலின் ஒளி மங்கிப் போகச் செய்கின்ற<br /><strong><br />பெண் சஞ்சல மென்பதில்</strong> ... பெண்களிடத்திலே ஏற்படும் மயக்கம் என்பதை,<br /><strong><br />அணுகாதே</strong> ... நான் நெருங்கி அதிலே சிக்கிக் கொள்ளாமல், <br /><strong><br />இன்பந்தந்து</strong> ... (என்றும்) இன்பத்தைத் தருவதும்,<br /><strong><br />உம்பர் தொழும்பத கஞ்சம்</strong> ... தேவர்கள் தொழுவதுமான உன் பாதத் தாமரையையே<br /><strong><br />தம் தஞ்ச மெனும்படி</strong> ... தனக்குத் தஞ்சம், புகலிடம் என்று உள்ளத்தில் கொண்டு,</p><p align="JUSTIFY"><strong>என்றென்றுந் தொண்டு செயும்படி</strong> <strong>அருள்வாயே</strong> ... எப்போதும் உன் பாதமலர்களைப் பணிந்து சேவை செய்யும்படியாக எனக்கு அருள்புரிய வேண்டும்.<br /><strong><br />நின்பங்கு ஒன்றும்</strong> ... உன் அருகிலே நெருங்கி உன்னோடு ஒன்றி நிற்கின்ற,<br /><br /><strong>குற மின்சரணங் கண்டு</strong> ... குறமகளும், மின்னல் போன்றவளுமான வள்ளியம்மையின் திருவடிகளைக் கண்டு,<br /><strong><br />உன் தஞ்ச மெனும்படி நின்று</strong> ... உனக்குப் புகலிடம் அவையே என்று கொண்டு<br /><strong><br />அன்பின் தன்படி</strong> ... அன்புடைய இயற்கையின்படி,<br /><strong><br />கும்பிடு மிளையோனே</strong> ... அம்மையின் பாதத்தைத் தொழுகின்ற இளையவனே!<br /><strong><br />பைம்பொன் சிந்தின்</strong> ... பசுமைப் பொலிவை உடைய கடலின் <br /><strong><br />துறை தங்கிய</strong> ... கரையிலே இருப்பதான<br /><strong><br />குன்றெங்குஞ் சங்கு வலம்புரி பம்பும்</strong> ... குன்றில் எல்லா இடங்களிலும் சங்கு, வலம்புரிச் சங்கு எல்லாமும் நிரம்பிக் கிடக்கின்ற<br /><strong><br />தென் செந்திலில் வந்தருள் பெருமாளே.</strong> ... அழகிய* திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமாளே.<br /><em><br />(* தென் என்ற சொல்லுக்கு, தெற்கு என்பதோடு, அழகு, கற்பு, இசை, இசைப்பாட்டு, இனிமை என்றெல்லாம் பொருளுண்டு).<br /></em><strong><em><br />சுருக்க உரை</em></strong></p><p align="JUSTIFY"><em>முருகா!  பசுமைப் பொலிவுள்ள கடற்கரையில் இருக்கும் குன்று முழுவதிலும் சங்கும் வலம்புரியும் நிரம்பிக் கிடப்பதான அழகிய திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமாளே!  உன் அருகிலே நெருங்கி நிற்பவளான குறக்குல மின்னல் போன்ற வள்ளியின் பாதங்களையே உன்னுடைய புகலிடமாக — தஞ்சமாகக் — கொண்டு அன்பின் மிகுதியாலே அந்தப் பாதகமலங்களைத் தொழுதவனே!</em></p><p align="JUSTIFY"><em>பெண்களால் ஏற்படும் மயக்கத்தில் சிக்கிக் கொண்டு அதனாலே துன்பமடைந்து, உடல் மெலிந்து, முற்றிலும் வருத்தமடைந்து; அன்பு, நல்ல குணங்கள் எல்லாவற்றையும் இழந்துபோகும்படி அந்த மயக்கத்தால் நான் வாடாமல்,</em></p><p align="JUSTIFY"><em>நிலையான இன்பத்தைத் தருவதும், தேவர்கள் வந்து வணங்குவதுமான உன்னுடைய பாதகமலங்களையே எம்முடைய தஞ்சம் என்று கொண்டு என்றென்றும் உன் திருவடிகளுக்கே தொண்டாற்றும்படி அருள வேண்டும்.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.