/

பகுதி - 714

திருவடிகளின் நிழலிலே புகுந்திருக்க வேண்டும்

News image
Updated On :12 டிசம்பர் 2017, 6:30 pm

‘உன்னுடைய திருவடிகளின் நிழலிலே புகுந்திருக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஐந்து குற்றெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு முடியும் மூன்றெழுத்துகளையும் கொண்டவை.


தனதன தனனா தனதன தனதனா
      தனதன தனனா                     தனதான

கெஜநடை மடவார் வசமதி லுருகா
         கிலெசம துறுபாழ்                வினையாலே

கெதிபெற நினையா துதிதனை யறியா
         கெடுசுக மதிலாழ்                மதியாலே

தசையது மருவீ வசையுட லுடனே
         தரணியில் மிகவே               யுலைவேனோ

சததள மலர்வார் புணைநின கழலார்
         தருநிழல் புகவே                 தருவாயே

திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
         திருநெடு கருமால்               மருகோனே

திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
         திரிபுரை யருள்சீர்                முருகோனே

நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
         நிறையயில் முடுகா              விடுவோனே

நிலமிசை புகழார் தலமெனு மருணா
         நெடுமதில் வடசார்               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.