ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 492

மாயாபுரி எனப்படும் தலம்

Updated On :1 மார்ச் 2017, 6:30 pm

‘மாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே’ என்று இந்தப் பாடலில் இறைவனை அழைப்பதால், இதில் மாயை என்ற பெயரால் சுட்டப்படுவது மாயாபுரி எனப்படும் தலம்; ஹரித்வாரை பிங்கல நிகண்டு ‘அரித்துவார மாயாபுரியே’ என்று குறிப்பதால் இது ஹரித்வாரைக் குறிக்கும் பாடல் என்று உரையாசிரியர் குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள் குறித்திருக்கிறார்கள்.

‘சிகரம் அருந்த’ என்று தொடங்குவது ‘மலையை எப்படி அருந்துவது’ என்று திகைக்க வைத்தாலும், ‘அகரம்’ என்பது அ என்னும் எழுத்தைக் குறிக்கிறது; தகரம் என்பது த என்னும் எழுத்தைக் குறிக்கிறது; அதுபோல சிகரம் என்பது சி என்னும் எழுத்தைக் குறிக்கிறது என்று அறிகிறோம்.  இதன் விரிவைப் பொருள் காணும்போது காணலாம்.

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒவ்வொரு சீரும் மும்மூன்று எழுத்துகளால் அமைந்திருந்தாலும், முதற்சீர் குற்றெழுத்துகளால் ஆனது; இரண்டாம் சீர் மெல்லொற்றோடு கூடியது; மூன்றாம் சீர் நெடிலோடு தொடங்குவது.   

தனன தனந்த தானன                     தனதான
      தனன தனந்த தானன               தனதான

சிகர மருந்த வாழ்வது                     சிவஞானம்
      சிதறி யலைந்து போவது            செயலாசை
மகர நெருங்க வீழ்வது                    மகமாய
      மருவி நினைந்தி டாவருள்          புரிவாயே
அகர நெருங்கி னாமய                    முறவாகி
      அவச மொடுங்கை யாறொடு        முனமேகிக்
ககன மிசைந்த சூரியர்                     புகமாயை
      கருணை பொழிந்து மேவிய         பெருமாளே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.