/

பகுதி - 702

எந்த மாதிரியான நிலையை அடைந்தாலும்

Updated On :2 டிசம்பர் 2017, 8:58 am

‘எந்த மாதிரியான நிலையை அடைந்தாலும் உன்னுடைய உபதேச மொழியை மறவேன்’ என்று சொல்லும் இப்பாடல் காஞ்சித் தலத்துக்கானது.

எல்லாச் சீர்களுமே ஒரு நெடிலோடு தொடங்குகின்ற இந்தப் பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகள் உள்ளன.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளையும் (கணக்கில் சேராத) ஒரு மெல்லொற்றையும் ஒரு வல்லொற்றையும்; இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்க;ள ஒரு நெடிலையும் இரண்டு குற்றெழுத்துகளையும் கொண்டதாக அமைந்துள்ளன.


தாந்தத்தன தானன தானன
                தாந்தத்தன தானன தானன
                தாந்தத்தன தானன தானன தனதானா

வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய
               நீந்திப்பது மாதியை மீதினி
               லூர்ந்துற்பல வோடையில் நீடிய உகள்சேலை

வார்ந்துப்பக ழீயேதி ராகிமை
               கூர்ந்துப்பரி யாவரி சேரவை
               சேர்ந்துக்குழை யோடுச லாடிய விழியாலே

சாய்ந்துப்பனை யூணவ ரானபொ
               லாய்ந்துப்பணி னாரிரு தாளினில்
               வீழ்ந்திப்படி மீதினி லேசிறி தறிவாலே

சாந்தப்பிய மாமலை நேர்முலை
               சேர்ந்துப்படி வீணினி லேயுயிர்
               மாய்ந்திப்படி போகினு மோர்மொழி மறவேனே

சாந்தப்பெரு நீர்வெள மாகவே
               பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ
               காந்தப்பெரு நாதனு மாகிய மதனாலே

தாந்தக்கிட தாகிட தாகிட
               தோந்திக்கிட தோதிமி தோதிமி
               சேஞ்செக்கண சேகெண சேகெண வெனதாளம்

காந்தப்பத மாறியு லாவுய
               ராந்தற்குரு நாதனு மாகியெ
               போந்தப்பெரு மானகுரு காவொரு பெரியோனே

காந்தக்கலு மூசியு மேயென
                        ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
                        காஞ்சிப்பதி மா நகர் மேவிய  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.