ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 796

நற்றாய் இரங்கல் துறையில் பெருமான்..

News image
Updated On :10 ஏப்ரல் 2018, 6:30 pm

நற்றாய் இரங்கல் துறையில் பெருமான் மீது காதல் கொண்ட மகளைக் காக்குமாறு தாய் வேண்டுகின்ற பாவனையில் அமைந்தது இப்பாடல்.

அடிக்கு ஒற்றொழிது 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். எல்லாச் சீர்களிலும் ஒன்றேபோல மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.

தனனத் தனனத் தனனத் தனனத்

      தனனத் தனனத்                 தனதான

பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்

         துகளிற் புதையத்                 தனமீதே

      புரளப் புரளக் கறுவித் தறுகட்

         பொருவிற் சுறவக் கொடி         வேள்தோள்       

தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்

         செயலற் றனள்கற்               பழியாதே

      செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்

         தெரிவைக் குணர்வைத்           தரவேணும்

சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்

         சுரருக் குரிமைப்                  புரிவோனே 

      சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்

         சுருதிப் பொருளைப்              பகர்வோனே

தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்

         தனிநெட் டயிலைத்              தொடும்வீரா 

      தவளப் பணிலத் தரளப் பழனத்

         தணிகைக் குமரப்                பெருமாளே.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.