ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பதச் சேதம்

சொற் பொருள்

தேன் இயல் சொற்குஅணி மாதர்

 

தேன் இயல்: தேனின் தன்மையை; சொற்கு அணிமாதர்: சொல்லில் அணிந்திருக்கின்ற பெண்களுக்கு;

சேவை தனைகருதாதே

 

 

யான் எனது அற்றிடுபோதம்

 

போதம்: ஞானம்;

யான் அறிதற்குஅருள்வாயே

 

 

வானவருக்கு அரசான

 

 

வாசவனுக்குஇனியோனே

 

வாசவன்: இந்திரன்;

ஆனை முகற்குஇளையோனே 

 

 

ஆறு முக பெருமாளே.

 

 

தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவை தனைக் கருதாதே... தங்களுடைய பேச்சிலே தேனின் இனிமையைக் கொண்டிருக்கின்ற பெண்களுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருப்பதை எண்ணத்தில் கொள்ளாமல்,

யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே... யான், எனது (எனப்படும் அகங்காரமும் மமகாரமும்) என்னைவிட்டு நீங்குவதற்கான ஞானத்தை நான் உணரும்படியாக அருளவேண்டும்.

வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே... தேவர்களின் அரசனான இந்திரனுக்கு இனியவனே!

ஆனை முகற்கு இளையோனே ஆறு முகப் பெருமாளே.... ஆனை முகனின் இளையவனே!  ஆறுமுகங்களைக் கொண்ட பெருமாளே!

சுருக்க உரை

தேவர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனியவனே! யானைமுகனுக்கு இளையவனே!  ஆறுமுகங்களைக் கொண்ட பெருமாளே!

தேனின் இனிய சுவையைத் தங்களுடைய பேச்சிலே கொண்டிருக்கும் பெண்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருப்பதை நான் நினையாமல், ‘நான், எனது’ என்னும் கட்டுகளை அறுப்பதற்கான ஞானத்தை உணருமாறு அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.