சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 888

பொதுமகளிரால் வருகின்ற துன்பம்..

News image
Updated On :8 ஆகஸ்ட் 2018, 6:30 pm

பொதுமகளிரால் வருகின்ற துன்பம் நீங்கவேண்டும் என்று கோரும் இப்பாடல் திருப்பரங்குன்றுக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூனறெழுத்துகளும்; மூன்று-நான்கு, ஏழு-எட்டு, பதினொன்று-பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு நான்கு குற்றெழுத்துகளுமாக அமைந்துள்ளன,

தனத்த தந்தன தனதன தனதன

      தனத்த தந்தன தனதன தனதன

      தனத்த தந்தன தனதன தனதன                  தனதான

கறுக்கு மஞ்சன விழியிணை அயில்கொடு

         நெருக்கி நெஞ்சற எறிதர பொழுதொரு

         கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு      நகையாலே

      களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ

         மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்

         கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு    கொடுபோகி

நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற

         அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர

         நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு             மிடறூடே

      நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென

         இசைத்து நன்கொடு மனமது மறுகிட

         நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற              அருள்வாயே

நிரைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென

         உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென

         நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென         வரைபோலும்

      நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு

         சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு

         நிணக்கொ ழம்பொடு குருதிகள் சொரிதர      அடுதீரா

திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு

         புழைக்கை தண்கட கயமுக மிகவுள

         சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரு         மிளையோனே

      சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய

         பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு

         திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண            பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.