சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 856

தமர் அல்லாதாரும் பாடி..

News image
Updated On :17 ஜூன் 2018, 6:30 pm

‘தமர் அல்லாதாரும் பாடி மகிழுமாறு நான் ஆசுகவி பாடவேண்டும்’ என்று கோரும் இப்பாடலில் அம்பிகையின் பல நாமங்கள் வரிசையாக அடுக்கப்படுகின்றன.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு நெடில், ஒரு குறில் என்று மூன்றெழுத்துகளும்; இரண்டு, மூன்று, ஆறு, ஏழு, பத்து, பதினொன்று ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானான தான தான தானன

                தானான தான தான தானன

                தானான தான தான தானன                            தந்ததான

ஆராத காத லாகி மாதர்த

                        மாபாத சூட மீதி லேவிழி

                        யாலோல னாய்வி கார மாகியி            லஞ்சியாலே

                ஆசாப சாசு மூடி மேலிட

                        ஆசார வீன னாகி யேமிக

                        ஆபாச னாகி யோடி நாளும                      ழிந்திடாதே

ஈராறு தோளு மாறு மாமுக

                        மோடாரு நீப வாச மாலையு

                        மேறான தோகை நீல வாசியு                 மன்பினாலே

                ஏனோரு மோது மாறு தீதற

                        நானாசு பாடி யாடி நாடொறு

                        மீடேறு மாறு ஞான போதக                      மன்புறாதோ

வாராகி நீள்க பாலி மாலினி

                        மாமாயி யாயி தேவி யாமளை

                        வாசாம கோச ராப ராபரை                         யிங்குளாவி

                        வாதாடி மோடி காடு காளுமை

                மாஞால லீலி யால போசனி

                        மாகாளி சூலி வாலை யோகினி            யம்பவானி

சூராரி மாபு ராரி கோமளை

                        தூளாய பூதி பூசு நாரணி

                        சோணாச லாதி லோக நாயகி                 தந்தவாழ்வே

                தோளாலும் வாளி னாலு மாறிடு

                        தோலாத வான நாடு சூறைகொள்

                        சூராரி யேவி சாக னேசுரர்                          தம்பிரானே.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.