பதச் சேதம் | சொற் பொருள் |
ஆராத காதலாகி மாதர்தம் ஆபாத சூடம்மீதிலே விழியால் ஆலோலனாய்விகாரமாகிஇலஞ்சியாலே
| ஆராத: தீராத; காதலாகி: மோகம் கொண்டு; ஆபாத: பாதத்திலிருந்து; சூடம்: உச்சி (வரையில்); ஆலோலனாய்: ஆலோலிதனாய் (ஆலோலிதன்: பிரியம் கொண்டவன்); இலஞ்சியாலே: குணவிசேடத்தால் (இலஞ்சி: குணம்); |
ஆசா பசாசு மூடி மேலிட ஆசார ஈனனாகியே மிக ஆபாசன் ஆகியே ஓடிநாளும் அழிந்திடாதே
| ஆசா: ஆசையாகிய; பசாசு: பிசாசு; ஆபாசன் ஆகி: ஒழுக்கம் கெட்டவனாகி; |
ஈராறு தோளும் ஆறு மாமுகமோடு ஆரும் நீபவாச மாலையும் ஏறானதோகை நீல வாசியும்அன்பினாலே
| ஆரும்: நிறைந்திருக்கும்; நீப வாச மாலையும்: நறுமணமுள்ள கடப்ப மாலையும்; ஏறான: ஆண் மயிலான; வாசியும்: குதிரையும் (மயில் வாகனமும்); |
ஏனோரும் ஓதுமாறு தீதுஅற நான் ஆசு பாடி ஆடிநாள் தொறும் ஈடேறுமாறு ஞானபோதகம் அன்புஉறாதோ
| ஏனோரும்: மற்றவர்களும்; ஞான போதகம்: ஞான உபதேசம்; |
வாராகி நீள் கபாலிமாலினி மா மாயி ஆயிதேவி யாமளை வாசா மகோசரா பராபரைஇங்குள் ஆயி
| கபாலி: கபாலத்தை ஏந்தியவள்; மாலினி: மாலையை அணிந்தவள்; மாமாயி: மகமாயி; ஆயி: தாய்; யாமளை: பச்சை நிறம் கொண்டவள்; வாசா மகோசரா: வாக்குக்கு எட்டாதவள்; இங்குளாயி: இங்கு (உள்ளத்திலே) உள்ள தாய்; |
வாதாடி மோடி காடுகாள்உமை மா ஞால லீலிஆல போசனி மா காளிசூலி வாலை யோகினிஅம் பவானி
| மோடி: துர்க்கை; காடுகாள்: வன தேவதை; மாஞால லீலி: பேருலகிலே லீலைகளைப் புரிபவள்; ஆல போசனி: ஆலகாலத்தை உண்டவள்; வாலை: பாலை; அம் பவானி: அழகிய பவானி; |
சூராரி மா புராரிகோமளை தூளாய பூதிபூசு(ம்) நாரணி சோணாசல ஆதி லோகநாயகி தந்த வாழ்வே
| சூராரி: சூரனைப் (மகிஷாசுரனை) வதைத்தவள்; புராரி: திரிபுரங்களை அழித்தவள்; கோமளை: அழகி; பூதி: திருநீறு; சோணாசலாதி: திருவண்ணாமலையில் ஆதி தேவதையாய் இருப்பவள்; லோகநாயகி: உலக நாயகி; |
தோளாலும்வாளினாலும் மாறிடு தோலாத வான நாடுசூறை கொள் சூராரியேவிசாகனே சுரர்தம்பிரானே
| மாறிடு: பகைமை பூண்ட; தோலாத: தோல்வி அடையாத; சூறைகொள்: கொள்ளையிட்டவன்; சூராரியே: சூர பத்மனைப் வதைத்தவனே; |
ஆராத காத லாகி மாதர்தம் ஆபாத சூட மீதி லே விழி யாலோலனாய் விகாரமாகி .... தணியாத மோகத்தினால் பெண்களுடைய உள்ளங்கால் முதல் உச்சி வரையிலே உள்ள அங்கங்களில் கண்கள் அலைபாய்வதால் மனவிகாரத்தை அடைந்து;
இலஞ்சியாலே ஆசா பசாசு மூடி மேலிட ஆசார வீனனாகியே மிக ஆபாசனாகி யோடி நாளும் அழிந்திடாதே... குணக்கேடு உற்றும்; ஆசையாகிய பிசாசால் கவரப்பட்டும்; அசுத்தனாகி எப்போதும் அலைந்து திரிந்து அழிந்துபோகாமல்;
ஈராறு தோளும் ஆறு மாமுகமோடு ஆரு நீப வாச மாலையும் ஏறான தோகை நீல வாசியும் .... பன்னிரு தோள்களையும்; ஆறு திருமுகங்களையும்; நிறைந்த வாசம் வீசுகின்ற கடப்ப மாலையையும்; மயில் என்னும் நீல நிற வாகனத்தையும்;
அன்பினாலே ஏனோரும் ஓதுமாறு தீதற நானாசு பாடி யாடி நாடொறும் ஈடேறு மாறு ஞான போதகம் அன்புறாதோ... (அன்பில்லாத) மற்றவர்களும் அன்பு பூண்டு போற்றும்படியாகவும் தீமைகள் நீங்கும்படியாகவும் நான் ஆசுகவிகளைப் பாடியும் ஆடியும் என்றும் கடைத்தேறுமாறு அடியேனுக்கு அன்போடு ஞானோபதேசம் அருளாயோ (அருளவேண்டும்).
வாராகி நீள் கபாலி மாலினி மாமாயி யாயி தேவி யாமளை... வாராகியும்; கபாலத்தை ஏந்தியவளும்; மாலையை அணிந்தவளும்; மகமாயியும்; தாயும்; தேவியும்; சியாமள நிறத்தினளும்;
வாசா மகோசரா பராபரை இங்கு உள் ஆயி... வாக்குக்கு எட்டாதவளும்; பராபரையும்; உள்ளத்திலே குடியிருக்கின்ற தாயும்;
வாதாடி மோடி காடுகாள் உமை மாஞால லீலி ஆல போசனி மாகாளி சூலி வாலை யோகினி அம்பவானி... (காளியாக) சிவனிடத்திலே வாது புரிந்தவளும்; துர்க்கையும்; வனதேவதையும்; உமாதேவியும்; பெரியதான நிலவுலகிலே லீலைகளைப் புரிந்தவளும்; நஞ்சை உண்டவளும்; மஹா காளியும்; சூலத்தை ஏந்தியவளும்; பாலாம்பிகையும்; யோகினியும்; அழகிய பவானியும்;
சூராரி மாபுராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி சோணாசலாதி லோக நாயகி தந்தவாழ்வே... மகிஷாசுரனை வதைத்தவளும்; திரிபுரங்களை எரித்தவளும்; திருவண்ணாமலையில் ஆதி தேவியாக இருப்பவளுமான உலக நாயகி ஈன்ற செல்வமே!
தோளாலும் வாளினாலு மாறிடு தோலாத வான நாடு சூறைகொள் சூராரியே விசாகனே சுரர் தம்பிரானே... தோளாலும் வாளாலும் போரிட்டவனும்; பகைமை பூண்டவனும்; தோல்வியே இல்லாதவனும்; தேவலோகத்தைக் கொள்ளையடித்தவனுமான சூரனை வதைத்தவனே! விசாகனே! தேவர்கள் தலைவனே! (தம்பிரானே!)
சுருக்க உரை
வாராகியும்; கபாலத்தை ஏந்தியவளும்; மாலையை அணிந்தவளும்; மகமாயியும்; தாயும்; தேவியும்; சியாமள வண்ணமுடையவளும்; வாக்குக்கு எட்டாதவளும்; உள்ளத்தில் எப்போதும் குடியிருப்பவளும்; இறைவனுடன் காளியாக வாதாடியவளும்; துர்க்கையும்; வனதேவதையும்; உலகிலே லீலைகளைப் புரிபவளும்; விஷத்தை உண்டவளும்; மஹா காளியும்; சூலாயுதத்தை ஏந்தியவளும்; பாலாம்பிகையும்; யோகினியும்; அழகிய பவானியும்; மகிடாசுரனை வதைத்தவளும்; திரிபுரங்களை எரித்தவளும்; அழகியும்; திருநீற்றைப் பூசுபவளும்; நாரணியும்; திருவண்ணாமலையில் ஆதி தேவதையாக இருப்பவளுமான உலக நாயகி பெற்றெடுத்த செல்வமே! தோளாலும் வாளாலும் போரிட்டவனும்; பகைமை கொண்டவனும்; தோல்வியற்றவனும்; தேவலோகத்தைச் சூறையாடியவனுமான சூரனை வதைத்தவனே! விசாகனே! தேவர் தம்பிரானே!
அடங்காத மோகத்தால் பெண்களுடைய உச்சி முதல் பாதம் வரையில் விழிகள் அலைபாய்ந்து ஈடுபட்டு மனவிகாரம் கொண்டவனாயிருக்கும் குணத்தின் தன்மையாலும்; ஆசையாகிய பேய் பிடித்து ஆட்டுவதாலும்; ஆசாரக் குறைவுபட்ட அடியேன் அசுத்தனாகி எங்கெங்கும் திரிந்து கெட்டழியாதபடி,
உன்னுடைய பன்னிரு தோள்கள்; ஆறு முகங்கள்; வாசம் நிறைந்த கடப்ப மாலை; வாகனமான நீல மயில் முதலான எல்லாவற்றின் மீதும் பிறரும் அன்புகொண்டு போற்றுமாறும் தீமைகள் அழியுமாறும் ஆசுகவி பாடும்படியாக அடியேனுக்கு ஞானோபதேசம் செய்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


