சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 858

கருவிலே விழுந்து மீண்டும்..

News image
Updated On :19 ஜூன் 2018, 6:30 pm

‘கருவிலே விழுந்து மீண்டும் மீண்டும் பிறக்கின்ற இந்த நிலை ஒழியவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் உள்ளன.

தனதனன தந்த தனதனன தந்த

                தனதனன தந்த                                                           தனதான

மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்

                        வலிமைகுல நின்ற                                        நிலையூர்பேர்

      வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்

                        வரிசைதம ரென்று                                          வருமாயக்

கனவுநிலை யின்ப மதனையென தென்று

                        கருதிவிழி யின்ப                                              மடவார்தம்

      கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து

                        கருவில் விழுகின்ற                                       தியல்போதான்

நினையுநின தன்பர் பழவினைக ளைந்து

                        நெடுவரைபி ளந்த                                            கதிர்வேலா

      நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்

                        நிலைபெறஇ ருந்த                                          முருகோனே

புனைமலர்பு னைந்த புனமறம டந்தை

                        புளகஇரு கொங்கை                                        புணர்மார்பா

      பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்

                        பொடிபடந டந்த                                                  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.