ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 792

உனக்கு என்றென்றும் தொண்டாற்ற வேண்டும்

News image
Updated On :26 மார்ச் 2018, 6:30 pm

‘உனக்கு என்றென்றும் தொண்டாற்ற வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் காஞ்சிபுரத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களின் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு  (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு  (கணக்கில் சேராத) வல்லொற்றும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் ஒரு  (கணக்கில் சேராத) மெல்லொற்றும் அமைந்துள்ளன.  தொங்கல் சீரைத் தவிர மற்ற எந்தச் சீரிலும் நெடில் பயிலாத பாடல்.

தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்            தனதான

 
அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்

         டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்

         றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங்    கொருகோடி

      அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்

         பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்

         தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும்        படிபாடிப்

பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும்

         பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்

         படுகளம் புக்குத் தொக்குந டிக்கும்       படிமோதிப்

      படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ்

         சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின்

         பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண்    டடைவேனோ

பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்

         சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும்

         ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை      துத்தங்குரலாதி

      பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும்

         கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும்

         பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந்  தியும்நீலக்

கரியகொண் டற்கொப் பித்தக துப்புந்

         திலகமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்

         கனவடங் கட்டப் பட்டக ழுத்துந்        திருவான

      கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங்

         கருதுமன் பர்க்குச் சித்தி யளிக்குங்

         கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும்      பெருமாளே.
 

உனக்கு என்றென்றும் தொண்டாற்ற வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் காஞ்சிபுரத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களின் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு  (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு  (கணக்கில் சேராத) வல்லொற்றும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் ஒரு  (கணக்கில் சேராத) மெல்லொற்றும் அமைந்துள்ளன.  தொங்கல் சீரைத் தவிர மற்ற எந்தச் சீரிலும் நெடில் பயிலாத பாடல்.

தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்            தனதான

அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்

         டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்

         றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங்    கொருகோடி

      அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்

         பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்

         தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும்        படிபாடிப்

பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும்

         பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்

         படுகளம் புக்குத் தொக்குந டிக்கும்       படிமோதிப்

      படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ்

         சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின்

         பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண்    டடைவேனோ

பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்

         சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும்

         ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை      துத்தங்குரலாதி

      பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும்

         கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும்

         பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந்  தியும்நீலக்

கரியகொண் டற்கொப் பித்தக துப்புந்

         திலகமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்

         கனவடங் கட்டப் பட்டக ழுத்துந்        திருவான

      கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங்

         கருதுமன் பர்க்குச் சித்தி யளிக்குங்

         கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும்      பெருமாளே.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.