சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 824

அடியேனை நல்வழிப்படுத்தி

News image
Updated On :12 மே 2018, 6:30 pm

‘அடியேனை நல்வழிப்படுத்தி அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

எத்தனை நீளமான அமைப்பாக இருந்தபோதிலும் வழக்கமாக நான்கே அடிகளைக் கொண்டனவையாக அமைந்திருக்கும் பிறபாடல்களைப்போல் அல்லாமல் இப்பாடல் எட்டு அடிகளைக் கொண்டது.  எதுகையமைப்பிலும் எட்டு எதுகைகள் இருப்பதைக் காணலாம். 

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாய் அமைந்திருக்கும் தொங்கல் சீர்களில் மூன்றாவது எழுத்து நெடிலாக அமைந்த நான்கெழுத்துகள் உள்ளன.

தனத்தத் தானன                          தனதான

      தனத்தத் தானன                    தனதான

சினத்துச் சீறிய                            வழிகாணச்

      சிரித்துப் பேசியு                     மயல்பூண

கனத்துப் போர்செயு                       முலைதோணக்

      கலைக்குட் பாதியு                   மறைவாக

மனத்துக் காறுதல்                        வருமாறு

      மலைப்பப் பேணியு                  மிகவாய

தனத்தைச் சூறைகொள்                    மடவார்தம்

      சதிக்குப் போம்வழி                  தவிர்வேனோ

தெனத்தத் தாதென                        எனவேபண்

      திருத்தத் தோடளி                   யிசைபாடும்

புனத்துத் காவல்கொள்                    குறமாதின்

      புணர்ச்சிக் கேயொரு                 வழிதேடி

இனத்துக் காவல                          ரறியாமல்

      இணக்கித் தோகையை              மகிழ்வோயென்

றெனக்குத் தாளிணை                     யருள்வாய்சூர்

      இறக்கப் போர்செய்த                 பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.