சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பதச் சேதம்

சொற் பொருள்

பரவைக்கு எத்தனை விசை தூது

 

பரவைக்கு: பரவை நாச்சியாருக்கு (சுந்தரருக்காக); எத்தனைவிசை: எத்தனை முறை;

பகரற்கு உற்றவர் என மாண் உன்

 

பகரற்கு உற்றவர்: சொல்லத் தயாராயிருந்தவர்; மாண்: பெருமை (படைத்த)

மரபுக்கு உச்சித ப்ரபுவாக

 

உச்சித: உசித, ஏற்ற வகையில்; ப்ரபுவாக: பெரியோனாக;

வரம் மெத்த தர வருவாயே

 

 

கரட கற்பகன் இளையோனே

 

கரட: மதம் பெருகும்; கற்பகன்: விநாயகன்;

கலை வில் கண் குற மகள் கேள்வா

 

கலை: மான் (போன்ற) வில்கண்: ஒளிபொருந்திய கண்(ணை உடைய);

அரனுக்கு உற்றது புகல்வோனே

 

உற்றது: நேர்ந்தது—இந்த இடத்திலே பிரணவத்தின் பொருள்;

அயனை குட்டிய பெருமாளே.

 

அயனை: பிரமனை;

பரவைக்கு எத்தனை விசைதூது... (சுந்தர மூர்த்தி நாயனாருக்காக) பரவை நாச்சியாரிடம் எத்தனைமுறை வேண்டுமானாலும் தூது சென்று,

பகரற்கு உற்றவர் என மாண்... பேசுவதற்குத் தயாராய் இருந்தவர் இவர் என்னும் பெருமையை உடைய (தந்தையான சிவபெருமானுடைய)

உன் மரபுக்கு உச்சித ப்ரபுவாக... உன் மரபுக்கு ஏற்ற பெரியோனாக விளங்கும் வண்ணமாக,

வரம் மெத்தத் தர வருவாயே... எனக்கு நிறைய வரங்களை அளிப்பதற்காக என் முன்னே எழுந்தருள வேண்டும்.

கரடக் கற்பகன் இளையோனே... மதம் பெருகும் மத்தகத்தை உடைய கற்பக விநாயகனுடைய இளையவனே!

கலைவிற் கட்குற மகள்கேள்வா... மானைப் போன்றதும் ஒளிவிடுவதுமான கண்களை உடைய குறமகளுடைய கேள்வனே!

அரனுக்கு உற்றது புகல்வோனே... சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை உபதேசித்தவனே!

அயனைக் குட்டிய பெருமாளே.... பிரமனைக் குட்டிய பெருமாளே!

சுருக்க உரை

மதம் பெருகும் மத்தகத்தை உடைய கற்பக விநாயகனுக்கு இளையவனே! மானைப்போன்றதும் ஒளிர்வதுமான கண்களையுடைய குறமகள் வள்ளியின் மணாளனே! பிரணவத்தின் பொருளை சிவபெருமானுக்கு உபதேசித்தவனே! பிரமனைக் குட்டிய பெருமாளே!

சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்காக பரவை நாச்சியாரிடம் எத்தனைமுறை வேண்டுமானாலும் தூது நடக்கத் தயாராக இருந்தவர் என்னும் பெருமையை உடைய சிவபெருமானின் குலத்துக்கு ஏற்ற பெரியோனாக விளங்கும் நீ, அடியேனுக்குப் பற்பல வரங்களைத் தருவதற்காக என் முன்னே எழுந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.