சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 829

நாளும் மிகுத்த கசிவாகி..

News image
Updated On :16 மே 2018, 10:14 am

பதச் சேதம்

சொற் பொருள்

நாளும் மிகுத்த கசிவாகி

 

கசிவாகி: நெகிழ்ச்சி அடைந்து;

ஞான நிருத்தம் அதை நாடும்

 

நிருத்தம்: நடனம்

ஏழை தனக்கும் அனுபூதி

 

அனுபூதி: அனுபவ ஞானம்;

ராசி தழைக்க அருள்வாயே

 

ராசி: யோகம், பாக்கியம்;

பூளை எருக்கு மதி நாக(ம்)

 

பூளை: ஒருவகைப் பூ—சிவபெருமான் சூடுவது; மதி: சந்திரன்;

பூணர் அளித்த சிறியோனே

 

பூணர்: பூண்டவர்;

வேளை தனக்கு உசிதமாக

 

வேளை தனக்கு: சமயத்துக்கு; உசிதமாக: ஏற்றாற்போல;

வேழம் அழைத்த பெருமாளே.

 

வேழம் அழைத்த: யானையை வரவழைத்த (வள்ளியை அச்சுறுத்துவதற்காக விநாயகனை வரவழைத்தது.)

நாளு மிகுத்த கசிவாகி... எப்போதும் அன்பினால் மனம் நெகிழ்ந்தபடி,

ஞான நிருத்தம் அதைநாடும்... உனது ஞான நடனத்தைக் காண விரும்புகின்ற,

ஏழை தனக்கும் அநுபூதி... எளியேனுக்கும் ஞான அனுபவம் என்கின்ற,

எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும் 

ராசி தழைக்க அருள்வாயே... பாக்கியம் சித்திக்குமாறு அருள்புரிய வேண்டும்.

பூளை யெருக்கு மதிநாக... பூளைப்பூவையும் எருக்க இலையையும் பிறை நிலவையும் பாம்பையும்

பூண ரளித்த சிறியோனே... சடாமுடியில் தரித்திருப்பவரான சிவனார் அருளிய மகவே!

வேளை தனக்கு உசிதமாக... சமயத்துக்குத் தகுந்ததைப் போல,

வேழ மழைத்த பெருமாளே.... யானையை வரவழைத்த பெருமாளே*!

(தினைப்புனத்தில் வள்ளியை அச்சுறுத்துவதற்காக விநாயகனை வரவழைத்தது.)

சுருக்க உரை

பூளைப் பூவையும் எருக்க இலையையும் பிறை நிலவையும் நாகத்தையும் சடாமுடியில் தரித்தவரான சிவபெருமான் அருளிய பிள்ளையே! உனக்கு வேண்டிய சமயத்திலே (வள்ளியை பயமுறுத்துவதற்காக) விநாயகனை  யானையாக வரவழைத்த பெருமாளே!

எப்போதும் மனம் கசிந்துருகி உன்னுடைய ஞான நடனக் கோலத்தைக் காணவிரும் எளியேனாகிய எனக்கு அனுபவ ஞானம் என்னும் பாக்கியம் சித்திக்குமாறு அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.