சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 840

உன்னை மலரிட்டுப் பூசை செய்ய

News image
Updated On :30 மே 2018, 6:30 pm

‘உன்னை மலரிட்டுப் பூசை செய்ய வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களின் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன

                தத்தனத் தத்ததன                                                    தனதான

மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்

                        மற்றுமுற் றக்குரவ                                        ரனைவோரும்

      வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு

                        மட்டுமற் றுப்பெருகு                                      மடியாரும்

புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது

                        பொய்க்குமெய்க் குச்செயலு                    முருகாதே

      புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு

                        புத்திமெத் தத்தருவ                                       தொருநாளே

செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு

                        செக்கமுற் றச்சலமு                                      மதிசூடி

      சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு

                        சித்தமுத் திச்சிவமு                                       மருள்வோனே

கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை

                        கொத்தினொக் கக்கொலைசெய்          வடிவேலா  

      கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது

                        குத்திவெட் டிப்பொருத                                பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.