திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பகுதி - 930

உனது திருவடிகளைத்..

News image
Updated On :29 அக்டோபர் 2018, 12:07 pm IST

‘உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் சுவாமிமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு நான்கு குற்றெழுத்துகளும்; மூன்று, ஆறு ஆகிய தொங்கல் சீர்களில் இரண்டு குற்றெழுத்தும் இரண்டு நெடிலுமாய் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தனதன                           தனதான

நிறைமதி முகமெனு                      மொளியாலே

      நெறிவிழி கணையெனு              நிகராலே  

உறவுகொள் மடவர்க                      ளுறவாமோ

      உனதிரு வடியினி                   யருள்வாயே

மறைபயி லரிதிரு                         மருகோனே

      மருவல ரசுரர்கள்                   குலகாலா

குறமகள் தனைமண                      மருள்வோனே

      குருமலை மருவிய                 பெருமாளே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.