தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 916

அடியேனுக்கு நீ அனுக் கிரகித்ததை..

News image
Updated On :27 செப்டம்பர் 2018, 6:30 pm

‘அடியேனுக்கு நீ அனுக்கிரகித்ததை எப்போதும் மறவேன்’ என்று சொல்கின்ற இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஆறு, பதினொன்று ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஏழு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; மூன்று, நான்கு, பதின்மூன்று, பதினான்கு, ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும்; ஐந்து, பத்து, பதினைந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெபழுத்துகளும் அமைந்திருக்கின்றன.

தானான தான தத்த தத்த தத்தன

      தானான தான தத்த தத்த தத்தன

      தானான தான தத்த தத்த தத்தன                தனதான

ஆனாத ஞான புத்தி யைக்கொடுத்ததும்

         ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்

         ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி      ரழியாதே

      ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்

         வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும்

         ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி         துலகேழும்

யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்

         தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்

         ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும்         இடராழி

      ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய

         நானாவி கார புற்பு தப்பி றப்பற

         ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும்           மறவேனே

மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்

         மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு

         மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி        லொருமூவர்

      மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்

         தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்

         வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக        வனமேவும்

தேநாய காஎ னத்து தித்த வுத்தம

         வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல்

         சேராத சூர னைத்து ணித்த டக்கிய           வரைமோதிச்

      சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ

         மாறாதி சாச ரக்கு லத்தை யிப்படி

         சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய          பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.