பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பகுதி - 936

உன்னுடைய திருவடியைப்..

News image
Updated On :3 ஜனவரி 2019, 12:00 am IST

‘உன்னுடைய திருவடியைப் பெறுவதும் ஒருநாளே’ என்றோதும் இந்தப் பாடல் திருத்தணிகைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களிலும்;   இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களிலும் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களிலும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களிலும் நான்கு நான்கு குற்றெழுத்துகளுமாக அமைந்துள்ளன.

தனத்த தத்தன தனதன தனதன       

      தனத்த தத்தன தனதன தனதன

                தனத்த தத்தன தனதன தனதன                                                   தனதான

தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்

                        குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்

                        சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள்                               முழுமோசந்

      துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்

                        முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்

                        துமித்த மித்திரர் விலைமுலை யினவலை              புகுதாமல்

அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்

                        தரித்த வித்ரும நிறமென வரவுட

                        னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு                              விளையாடி

      அவத்தை தத்துவ மழிபட இருளறை

                        விலக்கு வித்தொரு சுடரொளி பரவந   

                   லருட்பு கட்டியு னடியிணை யருளுவ                              தொருநாளே

படைத்த னைத்தையும் வினையுற நடனொடு

                        துடைத்த பத்தினி மரகத சொருபியொர்

            பரத்தி னுச்சியி னடநவி லுமையரு                                   ளிளையோனே

      பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்

                     தொடுத்த சக்கிர வளைகர மழகியர்

                    படிக்க டத்தையும் வயிறடை நெடியவர்                        மருகோனே

திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட

                        கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்

                        திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு           மயில்வீரா

      தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்

                        குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்

                      திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு                பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.